மேலும் அறிய

காதல் தோல்வியால் நண்பன் தற்கொலை செய்து கொண்ட வருத்தத்தில் விஷம் குடித்த இளைஞர்...!

எனது நண்பர் வீரவேல் ஒருதலை காதல் காரணமாக தற்கொலை செய்து கொண்டான், அதனை தடுத்து என் நண்பனை என்னால் காப்பாற்ற முடியாத காரணத்தால் நானும் தற்கொலை செய்து என் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தேன்

கடலூரை அடுத்த பனங்காட்டு நகர் பகுதியில் வசிக்கும் வீரவேலு ஒரு தலை காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீரவேலுவின் உயிரிழப்பால் மனமுடைந்த அவரது நண்பர் சூர்யமூர்த்தி என்பவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் ஆனால் அதிர்ஷ்டவசமாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
காதல் தோல்வியால் நண்பன் தற்கொலை செய்து கொண்ட வருத்தத்தில் விஷம் குடித்த இளைஞர்...!
 
வீரவேலு உயிரிழந்தது தொடர்பாக எந்த தகவலையும் காவல்துறையினருக்கு கொடுக்காமல் சடலத்தை பெற்றோர்கள் வீட்டிலேயே வைத்திருந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வீரவேலுவின் நண்பர் சூர்யமூர்த்தி என்பவர் தற்கொலைக்கு முயன்று கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த காவல்துறையினர், சிகிச்சை பெற்று வரும் அவரிடம் விசாரணை நடத்தினர். 
 
காதல் தோல்வியால் நண்பன் தற்கொலை செய்து கொண்ட வருத்தத்தில் விஷம் குடித்த இளைஞர்...!
 
தனது நண்பர் வீரவேல் ஒருதலை காதல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனை தடுத்து என் நண்பனை என்னால் காப்பாற்ற முடியாததனால் நானும் தற்கொலை செய்து என் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தேன் என்று கூறிய சூர்யமூர்த்தி. என் நண்பன் வீரவேல் தனது உறவுக்கார பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தான், அந்த பெண்ணும் என் நண்பனுடன் நெருங்கி பழகிவந்தார்கள். ஒரு கட்டத்தில் தனது காதலினை அந்த பெண்ணிடம் கூறப்போவதாக என்னிடம் கூறினான். பின் அந்த பெண்ணிடம் கூறிய பொழுது அந்த பெண்தான் காதல் செய்யும் நோக்கில் பழகவில்லை நட்போடு தான் பழகினேன் என கூறிவிட்டு சிறிது நாட்களில் பக்கத்து ஊரில் உள்ள ஒருவரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார்.
 
காதல் தோல்வியால் நண்பன் தற்கொலை செய்து கொண்ட வருத்தத்தில் விஷம் குடித்த இளைஞர்...!
 
இதனால் மனமுடைந்த என் நண்பன் என்னிடம் கூறி கவலைப்பட்டான் நான் அவனுக்கு ஆறுதல் கூறி அவனை சமாதானப்படுத்தினேன். ஆனால் என் நண்பன் இவ்வாறு தற்கொலை செய்துகொள்வான் என நினைக்கவில்லை நான் தான் அவனை காப்பாற்றியிருக்க வேண்டும் ஆனால் என்னால் அதை செய்ய முடியவில்லை அதனால் தான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன் என கூறினார்,
 
சூர்ய மூர்த்தி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்கொலை செய்து கொண்ட வீரவேலுவின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். அப்பொழுது அங்கே உறவினர்கள் உடலினை அடக்கம் செய்ய ஆயத்தம் ஆனபோது, காவல்துறையிடம் கூறாமல் ஏன் சடலத்தை அடக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கேட்டனர். இதனால் வீரவேலுவின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
காதல் தோல்வியால் நண்பன் தற்கொலை செய்து கொண்ட வருத்தத்தில் விஷம் குடித்த இளைஞர்...!
 
அவர் வீட்டிலே தான் தற்கொலை செய்து கொண்டார். அதனால் வழக்கு ஏதும் தேவையில்லை நாங்கள் அடக்கம் செய்கிறோம் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை அதை ஏற்காமல் சடலத்தை பிரேத பரிசோதனை செய்துதான் சடலத்தை ஒப்படைப்போம் என்று திட்டவட்டமாக கூறினர். அதன்பிறகு போலீசார் சடலத்தை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. காதல் தோல்வியால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் நண்பர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவருடைய நண்பரும் தற்கொலைக்கு முயற்சித்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தலைப்பு செய்திகள்

வாரிசு இல்லாத நிலையில் சொத்து யாருக்குப் போகும் ? உயில் மற்றும் செட்டில்மென்ட் விதிகள்
வாரிசு இல்லாத நிலையில் சொத்து யாருக்குப் போகும் ? உயில் மற்றும் செட்டில்மென்ட் விதிகள்
தனியார் பள்ளிகளில் இனிமேல் இவ்வளவு தான் பீஸா? விளம்பர பலகையில் வைக்க கோர்ட் போட்ட உத்தரவு.. முழு விபரம் உள்ளே!
தனியார் பள்ளிகளில் இனிமேல் இவ்வளவு தான் பீஸா? விளம்பர பலகையில் வைக்க கோர்ட் போட்ட உத்தரவு.. முழு விபரம் உள்ளே!
" அரசு மருத்துவமனையில் பணம் கேட்டால் உடனே வேலை காலி " - பணம் கேட்டால் 104-ல் புகார் அளிக்கலாம்
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
Onam special train : ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
Embed widget