மேலும் அறிய

கொல்கத்தா மருத்துவர் வழக்கு : தஞ்சையில் மருத்துவ மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம்

கொல்கத்தாவில் மருத்துவ முதுகலை மருத்துவ மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மருத்துவ மாணவ, மாணவியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்

தஞ்சாவூர்: கொல்கத்தாவில் மருத்துவ முதுகலை மருத்துவ மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மருத்துவ மாணவ, மாணவியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்

கொல்கத்தா ஆர்ஜிகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மருத்துவர் கல்லூரியில் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, கை, கால்,தொண்டை  சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர மரணத்தை கண்டித்து இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராடங்கள் நடத்தி வருகின்றனர்.

மெழுகுவர்த்தி ஏந்தி போராடும் மருத்துவர்கள்

தமிழ்நாடு அளவிலும் பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஒன்றுக்கூடி மெழுகுவர்த்தி ஏற்றி எதிர்ப்பையும், போராடும் மருத்துவர்களுக்கு ஆதாரவையும் தெரிவித்தனர்.

மாணவர்கள் மீதான வன்முறையை தடுக்க வேண்டும்

இதில் மருத்துவர்கள் மட்டுமல்ல அனைத்து பெண்களின் மீதான அத்து மீறல்கள் தடுக்கப்பட வேண்டும், பாதுகாப்பு வேண்டும், மருத்துவ மாணவர்களுக்கு மாநில அளவில் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும், கொல்கத்தாவில் மாணவர்கள் மீதான காவல் வன்முறை தடுக்கப்பட வேண்டும், மருத்துவர்கள் பாதுகாப்புக்கு தற்போது சட்டங்கள் இருந்தாலும் கூடுதல் அதிகாரம் அளிக்கின்ற சட்டம் இயற்றப்பட வேண்டும்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட முதுகலை பயிற்சி மருத்துவர் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற அட்டைகளை கையில் ஏந்தி மாணவ மாணவிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கொல்கத்தாவில் நடந்த போராட்டம்

கொல்கத்தாவில் கடந்த வாரம் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிகாலையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதனால் டாக்டர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தின் போது கொல்கத்தாவில் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மருத்துவமனைக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் சூறையாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் 15 போலீஸார் காயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி சிலரை கைது செய்துள்ளனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தவர்களின் படங்களை அடையாளம் கண்டு அவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். அதன் அடிப்படையில் அடுத்த சில மணி நேரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கை சி.பி.ஐ.கையில் எடுத்து விசாரித்து வருகிறது. சி.பி.ஐ சம்பவம் நடந்த தினத்தன்று பணியில் இருந்த 8 டாக்டர்கள் மற்றும் சில ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. அதோடு கொலை செய்யப்பட்ட டாக்டருடன் அன்று இரவு பணியாற்றிய 3 பேரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ அதிகாரிகள் மருத்துவமனைக்குள் சென்று ஆய்வு நடத்தினர்.

மருத்துவமனை சூறையாடப்பட்ட போது, கொலை நடந்த செமினார் ஹாலுக்குள் போராட்டக்காரர்கள் சென்றிருந்தனரா என்பதையும் அவர்கள் ஆய்வு செய்தனர். ஆளுநர் ஆனந்த் போஸும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து டாக்டர்ளும், செவிலியர்களும் கொல்கத்தா மற்றும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் நாடு முழுவரும் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். முக்கியமாக பணி புறக்கணிப்பும் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
வேலை தேடுபவரா நீங்கள்? வேலை கொடுப்பவராக மாற இதோ ஒரு பொன்னான வாய்ப்பு!
வேலை தேடுபவரா நீங்கள்? வேலை கொடுப்பவராக மாற இதோ ஒரு பொன்னான வாய்ப்பு!
Kovai Child Murder Case: கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கு… இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சி அதிரடி
Kovai Child Murder Case: கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கு… இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சி அதிரடி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
EPS ADMK: கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
US Iran War: மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
Karnataka CM: முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
Embed widget