மேலும் அறிய

திருவாரூரில் 50,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது - மீண்டும் சேதங்களை கணக்கெடுக்க கோரிக்கை

’’இன்னும் 60 நாட்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில் இனி புதிதாக விதை விதைக்கவும் தெளிக்கவும் முடியாது என விவசாயிகள் வேதனை’’

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 60 சதவீதம் நேரடி விதைப்பில்,  40 சதவிகிதம் நடவு பணியிலும் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கடந்த நான்கு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் மழையின் காரணமாக 50 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் முழுமையாக மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை  சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
திருவாரூரில் 50,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது - மீண்டும் சேதங்களை கணக்கெடுக்க கோரிக்கை
 
இந்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மீண்டும் 50,000 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் முழு கொள்ளளவில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்பொழுது ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளோம். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது.
 
தமிழ்நாடு முதல்வர் எங்கள் மாவட்டங்களை ஆய்வு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டால் 6 ஆயிரம் மதிப்பில் இடு பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் எங்களுக்கு இனி இடுபொருள்கள் கொடுத்து எந்தப் பயனும் இல்லை. காரணம் இன்னும் 60 நாட்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில் இனி புதிதாக விதை விதைக்கவும் தெளிக்கவும் முடியாது. ஆகையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக வேளாண் துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முழுமையாக கணக்கெடுத்து எங்களுக்கு உரிய நிவாரணத்தை வங்கி கணக்கு மூலமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூரில் 50,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது - மீண்டும் சேதங்களை கணக்கெடுக்க கோரிக்கை
 
அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக வேளாண்துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் அனைத்து அதிகாரிகளும் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தரவேண்டும்  மேலும் பாதிப்புகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து  ஆய்வு நடத்தி வருவதாகவும் எந்தெந்தப் பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் பலவீனமாக உள்ளதோ அந்தப் பகுதியில் உடனடியாக சரி செய்வதற்கு உரிய நடவடிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு அதிகாரிகள் செய்ய வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan‘’கைய புடிச்சுக்கோ ரவி’’மேட்சிங் DRESS..PHOTOSHOOT ஜோடியாக வந்த கெனிஷா-ரவி | Aarti Jayam Ravi Kenishaa

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
இந்தியாவின் 'பழைய' நண்பன்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் நம்மை காப்பாற்றிய ரஷியா
இந்தியாவின் ரியல் காம்ரேட்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் உதவிக்கு வந்த ரஷியா
Operation Sindoor Status: வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
IPL 2025: முடிவுக்கு வந்த போர்! மீண்டும் ஐபிஎல் தொடங்குது... ரெடியா மாமே?
IPL 2025: முடிவுக்கு வந்த போர்! மீண்டும் ஐபிஎல் தொடங்குது... ரெடியா மாமே?
Embed widget