![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Hardik Pandya apartment: அந்த அரபிக்கடலோரம்.. 8 பெட்ரூம்.. 30 கோடி ரூபாய்: ஹர்திக் - க்ருணால் புது வீடு!
மும்பையில் உள்ள ரஸ்டம்ஜி பாரமவுண்ட் அபார்ட்மெண்ட்டில், 8 படுக்கை அறைகள் கொண்ட சொகுசு வீட்டை சொந்தமாக்கியுள்ளனர் ஹர்திக் - க்ருணால் ப்ரதர்ஸ்.
![Hardik Pandya apartment: அந்த அரபிக்கடலோரம்.. 8 பெட்ரூம்.. 30 கோடி ரூபாய்: ஹர்திக் - க்ருணால் புது வீடு! Krunal and Hardik Pandya Mumbai apartment All you need to know about the swanky INR 30 crore apartment Hardik Pandya apartment: அந்த அரபிக்கடலோரம்.. 8 பெட்ரூம்.. 30 கோடி ரூபாய்: ஹர்திக் - க்ருணால் புது வீடு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/31/891f1408fddf41fc65160af8ba5a8c5a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகியோர், மும்பை நகரில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான 8 பெட்ரூம் வீட்டில் தற்போது குடியேறியுள்ளனர். மிக பிரமாண்டமான இந்த வீடுதான் இப்போது கிரிக்கெட்டர்களின் லைஃப்ஸ்டைல் உலகில் டிரெண்டிங் டாபிக்.
இந்திய கிரிக்கெட் அணிக்காகவும், ஐபிஎல் தொடரிலும் விளையாடி வரும் ஹர்திக், க்ருணால் சகோதரர்கள், பல விளம்பரப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் உள்ள ரஸ்டம்ஜி பாரமவுண்ட் அபார்ட்மெண்ட்டில், 8 படுக்கை அறைகள் கொண்ட சொகுசு வீட்டை சொந்தமாக்கியுள்ளனர். இந்த இடத்தை சொந்தமாக்க, 30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு, பல சுவாரஸ்யமான கட்டமைப்புகளை கொண்டதாக இந்த வீடு உள்ளது. அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹர்திக்-க்ருணால் குடும்பத்தினர் பகிரும் புகைப்படங்கள் வீட்டின் பிரமாண்டத்தை கண் முன்னே காட்டுகிறது.
இந்த வீட்டில், உடற் பயிற்சிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளடக்கிய ஜிம், விளையாட்டுக்கென தனி கேமிங் அறை ஆகியவை உள்ளது. அதுமட்டுமின்றி, தனியே ஒரு பிரமாண்ட தியேட்டரும் உள்ளது. தனியார் நீச்சல் குளம், ஸ்பா உள்ளிட்ட வசதிகளுடன் 4+4 படுக்கறைகள் கொண்ட இந்த வீடு மொத்தம் 3838 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
View this post on Instagram
வீட்டினுள்ளே இத்தனை வசதிகளை கொண்ட சொகுசு வீடாக மட்டும் இல்லாமல், அரேபிய கடலுக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த அபார்டெம்ண்டில் இருந்து, கண்ணைக் கொள்ளைக் கொள்ளும் அழகிய கடல் காட்சியும் தெரியும் திசையில் இந்த வீடு கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
பாலிவுட் காதலர்கள் என சமீபத்தில் டிரெண்டாகி வரும் டைகர் ஷார்ஃப் மற்றும் திஷா பதாணி ஆகியோரும் இந்த சொகுசு அபார்ட்மெண்டில்தான் குடியிருக்கின்றனர். இந்த பாலிவுட் பிரபலங்களின் பக்கத்து வீட்டுக்காரர்களாக இப்போது ஹர்திக் - க்ருணால் சகோதரர்கள் அங்கு குடியேறியுள்ளனர்.
முன்னதாக, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று, டி-20 தொடரை இழந்தது. இரண்டாவது டி-20 போட்டி நடைபெற இருந்த சில மணி நேரங்களுக்கு முன்னர், க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறியான தொண்டை கரகரப்பு இருந்துள்ளது. அதனை தொடர்ந்து, அவருக்கு ஆர்.டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. க்ருணால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த இந்திய அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனால், இன்னும் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள க்ருணால் பாண்ட்யா இந்தியா திரும்பவில்லை. கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி இருந்தாலும், கடைசி இரண்டு டி-20 போட்டிகளில் அவர் பங்கேற்காமல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)