மேலும் அறிய

மாவு அரைப்பதில் சிக்கலா? மிருதுவான இட்லி, தோசைக்கு இதுவெல்லாம் முக்கியம்? செய்முறை இதோ...

இட்லி மாவைப் பதமாக அரைப்பது எப்படி என்பதையும், அரைத்த மாவைப் பாதுகாப்பாக பல நாள்கள் வரை வைத்து பயன்படுத்துவது எப்படி என்பதையும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு வகைகளாக இட்லி, தோசை ஆகியவை கருதப்படுகின்றன. பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை ஆகிய உணவு வகைகள் செய்யப்படுவது பழக்கமாகவே கடைபிடித்து வருகின்றனர். ஆக இந்த உணவு வகைகளைச் சமைப்பது எளிது என்றாலும், இவற்றிற்கான மாவைப் பதமாக தயார் செய்வவது அவ்வளவு எளிது அல்ல. 

பதமாகத் தயார் செய்யப்படாத மாவைப் பயன்படுத்தி இட்லி செய்யும்போது அது உண்பதற்கு ஏற்றதாக இல்லாமல் போகிறது. இதே மாவை வைத்து தோசை செய்வது சிக்கல். பதமாகாத மாவைத் தோசைக் கல்லில் ஊற்றிய சிறிது நேரத்தில் அது கல்லோடு ஒட்டிக் கொள்வதோடு, அதனைத் திருப்புவதற்குள் தீய்ந்துவிடும் ஆபத்தும் உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி, இட்லி, தோசை ஆகியவற்றிற்கான மாவை அரைக்கும் போதே, நன்கு பதமாக அரைப்பது மட்டுமே. 

அதனால் இட்லி மாவைப் பதமாக அரைப்பது எப்படி என்பதையும், அரைத்த மாவைப் பாதுகாப்பாக பல நாள்கள் வரை வைத்து பயன்படுத்துவது எப்படி என்பதையும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

மாவு செய்வதற்கு, முதலில் நான்கு கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்து என்ற விகிதத்தில் அவற்றைத் தனித்தனியாக 5 மணி நேரங்களுக்கு மேல் ஊற வைக்க வேண்டும். மேலும் அவற்றில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு வெந்தயம் சேர்க்க வேண்டும். தேவையிருப்பின் அவல், ஜவ்வரிசி ஆகியவற்றையும் இதனுடன் சேர்க்கலாம். 

இதன் பிறகு, முதலில் உளுந்தைத் தனியாக அரைக்க வேண்டும். உளுந்து நன்றான அரைந்து பொங்கி வரும் நிலையில், அரைப்பதை நிறுத்திவிட்டு, அதனை எடுத்துவிட வேண்டும். உளுந்து மாவு மிகவும் நைசாக இருக்க வேண்டும். அரைக்கும் போது இடையில் கடினமாக இருப்பது தெரிந்தால், உளுந்து மாவில் தண்ணீர் கொஞ்சமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக அரிசியை அரைக்க வேண்டும். உளுந்து அரைப்பது போலவே, அரிசியை அரைக்கும் போதும் அது கடினமாக இருந்தால் தண்ணீர் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உளுந்து மாவு, அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அவற்றுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். மேலும், மாவைப் புளிக்க வைக்க ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரைப் பயன்படுத்தலாம். ஒரு இரவு முழுவதும் புளித்த மாவை, மறுநாள் இட்லி தோசை செய்யும்போது பயன்படுத்தினால் நாம் செய்யும் உணவு மிகவும் மிருதுவாக கிடைக்கும்.

இப்போது நாம் செய்த இந்த மாவை சுமார் 10 நாள்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். ஒரு மாதத்திற்கு மேல் இதே மாவைப் பயன்படுத்த வேண்டும் என்றால், இந்த மாவை ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரில் வைத்து காற்று புகாத அளவுக்கு மூடி வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இவ்வாறு பயன்படுத்தும் போது, இட்லி தோசை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே, அதனை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து வைத்துவிட வேண்டும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
Embed widget