மேலும் அறிய

மாவு அரைப்பதில் சிக்கலா? மிருதுவான இட்லி, தோசைக்கு இதுவெல்லாம் முக்கியம்? செய்முறை இதோ...

இட்லி மாவைப் பதமாக அரைப்பது எப்படி என்பதையும், அரைத்த மாவைப் பாதுகாப்பாக பல நாள்கள் வரை வைத்து பயன்படுத்துவது எப்படி என்பதையும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு வகைகளாக இட்லி, தோசை ஆகியவை கருதப்படுகின்றன. பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை ஆகிய உணவு வகைகள் செய்யப்படுவது பழக்கமாகவே கடைபிடித்து வருகின்றனர். ஆக இந்த உணவு வகைகளைச் சமைப்பது எளிது என்றாலும், இவற்றிற்கான மாவைப் பதமாக தயார் செய்வவது அவ்வளவு எளிது அல்ல. 

பதமாகத் தயார் செய்யப்படாத மாவைப் பயன்படுத்தி இட்லி செய்யும்போது அது உண்பதற்கு ஏற்றதாக இல்லாமல் போகிறது. இதே மாவை வைத்து தோசை செய்வது சிக்கல். பதமாகாத மாவைத் தோசைக் கல்லில் ஊற்றிய சிறிது நேரத்தில் அது கல்லோடு ஒட்டிக் கொள்வதோடு, அதனைத் திருப்புவதற்குள் தீய்ந்துவிடும் ஆபத்தும் உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி, இட்லி, தோசை ஆகியவற்றிற்கான மாவை அரைக்கும் போதே, நன்கு பதமாக அரைப்பது மட்டுமே. 

அதனால் இட்லி மாவைப் பதமாக அரைப்பது எப்படி என்பதையும், அரைத்த மாவைப் பாதுகாப்பாக பல நாள்கள் வரை வைத்து பயன்படுத்துவது எப்படி என்பதையும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

மாவு செய்வதற்கு, முதலில் நான்கு கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்து என்ற விகிதத்தில் அவற்றைத் தனித்தனியாக 5 மணி நேரங்களுக்கு மேல் ஊற வைக்க வேண்டும். மேலும் அவற்றில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு வெந்தயம் சேர்க்க வேண்டும். தேவையிருப்பின் அவல், ஜவ்வரிசி ஆகியவற்றையும் இதனுடன் சேர்க்கலாம். 

இதன் பிறகு, முதலில் உளுந்தைத் தனியாக அரைக்க வேண்டும். உளுந்து நன்றான அரைந்து பொங்கி வரும் நிலையில், அரைப்பதை நிறுத்திவிட்டு, அதனை எடுத்துவிட வேண்டும். உளுந்து மாவு மிகவும் நைசாக இருக்க வேண்டும். அரைக்கும் போது இடையில் கடினமாக இருப்பது தெரிந்தால், உளுந்து மாவில் தண்ணீர் கொஞ்சமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக அரிசியை அரைக்க வேண்டும். உளுந்து அரைப்பது போலவே, அரிசியை அரைக்கும் போதும் அது கடினமாக இருந்தால் தண்ணீர் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உளுந்து மாவு, அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அவற்றுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். மேலும், மாவைப் புளிக்க வைக்க ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரைப் பயன்படுத்தலாம். ஒரு இரவு முழுவதும் புளித்த மாவை, மறுநாள் இட்லி தோசை செய்யும்போது பயன்படுத்தினால் நாம் செய்யும் உணவு மிகவும் மிருதுவாக கிடைக்கும்.

இப்போது நாம் செய்த இந்த மாவை சுமார் 10 நாள்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். ஒரு மாதத்திற்கு மேல் இதே மாவைப் பயன்படுத்த வேண்டும் என்றால், இந்த மாவை ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரில் வைத்து காற்று புகாத அளவுக்கு மூடி வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இவ்வாறு பயன்படுத்தும் போது, இட்லி தோசை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே, அதனை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து வைத்துவிட வேண்டும். 

தலைப்பு செய்திகள்

Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
Embed widget