By: ABP NADU | Updated at : 30 Jul 2022 08:09 AM (IST)
தண்ணீர்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் கூற்று தண்ணீருக்கும் பொருந்தும். தேவைக்கு அதிகமாக அருந்தப்படும் தண்ணீர் உடலில் விஷத்தன்மையை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும். இது உடல் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது, குடல் செயல்பாட்டை சீராக்குகிறது. மேலும், சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
குறிப்பாக உடலில் பாதரசம் அதிகரிக்கும்போது, நமது திரவத் தேவைகளும் கூடும். ஆனால் அதிகப்படியான தண்ணீரைக் குடிப்பது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவ உலகத்தினர்.
தங்களுக்கு தாகம் இல்லாதபோதும் ஒரு சிலர் தண்ணீர் குடித்த வண்ணம் இருப்பார்கள். மேலும் பலர் உடற்பயிற்சியின்போதும், அதற்குப் பிறகும் திரவங்களை அதிகமாக உட்கொள்கின்றனர். தொழில்முறை விளையாட்டு வீரர்களும் அதிகப்படியான நீரேற்ற ஆபத்தில் உள்ளனர்.
இது அரிதான வழக்கு என்றாலும், அதிக தண்ணீர் குடிப்பது சில நேரங்களில் கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதா என்பதை சரிபார்க்கும் வழிகளில் ஒன்று உங்கள் சிறுநீரின் நிறத்தைச் சரிபார்ப்பது. சிறுநீர் நிறமற்றதாக இருந்தால் அது உங்கள் உடலுக்குத் தேவையானதை விட அதிக நீர் இருப்பதற்கான அறிகுறியாகும்.
"ஒருவரது உடலில் நீரேற்றம் மிகவும் முக்கியமானது மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இருப்பினும், அதிக தண்ணீர் குடிப்பதும் தீமையில் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் உடலில் உள்ள உப்பு மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகள் நீர்த்துப்போகும்போது உங்கள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த முடியாது. சிறுநீரின் மூலம் அனைத்து நீரும் வெளியேறுகிறது" என்கிறார் வாழ்க்கை முறை ஊட்டச்சத்து நிபுணர் ஸ்மிதா ஷெட்டி.
உங்கள் சிறுநீரகங்களால் அளவுக்கு அதிகமான தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை என்றால், நீங்கள் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை அனுபவிக்க நேரிடும்.
மேலும், தலைவலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். அதிக நீரேற்றம் அல்லது தசைப்பிடிப்பு இருக்கும்போது உங்கள் கால்கள், கைகள் அல்லது உதடுகளில் வீக்கத்தைக் காணலாம்.
"அதிக நீர் ரத்தத்தில் சோடியம் மற்றும் நீரின் சமநிலையை சீர்குலைக்கும். சரியான உணவை உட்கொள்வது, தரமான தூக்கத்தைப் பெறுவது போல் தண்ணீரை சரியான அளவில் உட்கொள்வதும் மிக முக்கியமானது" என்கிறார் ஸ்மித்தா. நாள் ஒன்றுக்கு 8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது பாதுகாப்பான வரம்பு என்றும் ஸ்மித்தா தெரிவித்துள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்
Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?
Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!
Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?