மேலும் அறிய

Mutton Vadai: அசத்தலான சுவையில் மட்டன் வடை... இனி ஈசியா செய்யலாம்.. டிப்ஸ் இதோ..!

இறைச்சியில் வடை செய்யலாம் தெரியுமா? மட்டன் வடை எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க...

மசால் வடை மற்றும் உளுந்து வடைகளை நாம் அனைவருமே சுவைத்திருப்போம். வடை பெரும்பாலானோருக்கு பிடித்த ரெசிபியும் கூட. அதிலும் மாலை நேரத்தில் டீ உடன் மசால் வடை வைத்து சாப்பிடுவதென்றால் ஏராளமானோருக்கு பிடிக்கும். இந்த வடைகளை எல்லாம் விட சுவையான ஒரு வடை உண்டு அது தான் மட்டன் வடை. இறைச்சி, மசாலாக்கள், பருப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வடை உங்கள் நாவின் சுவை மொட்டுகளை மலர செய்யும். இந்த மட்டன் வடையின் அலாதி சுவையில் நீங்கள் மெய் மறந்து போவீர்கள். 

தேவையான பொருட்கள்

200 கிராம் மட்டன் கீமா, 2 டீஸ்பூன் கடலை மாவு, 1/2 கப் கடலை பருப்பு, 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 1 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி பெருங்காயம், 1/2 டீஸ்பூன் பூண்டு விழுது, கையளவு கொத்தமல்லி இலைகள், 1 தேக்கரண்டி இஞ்சி விழுது, தேவையான அளவு தண்ணீர், 1 சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது), 1 தேக்கரண்டி கரம் மசாலா, சிவப்பு மிளகாய் சுவைக்கேற்ப, கையளவு கறிவேப்பிலை, உப்பு-  சுவைக்கேற்ப. 

செய்முறை

1.முதலில் ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அதில் பெருஞ்சீரகம், கடலை  பருப்பு, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

2.இப்போது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் சேர்த்து, பருப்பை சுமார் 45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு, அதில் உள்ள தண்ணீரை வடிகட்டிக்கொள்ள வேண்டும். ஒரு மிக்சியில் கடலை பருப்பை சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

3.துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சியை எடுத்து மிக்சியில் போட்டு கெட்டியான பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கரம் மசாலா சேர்க்கவும்.

4.ஒரு தனி கிண்ணத்தில், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை, இஞ்சி-பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு பெரிய கிண்ணத்தில், வெங்காயம், கொத்தமல்லி, கரம் மசாலா உளுத்தம் பருப்பு, இறைச்சி பேஸ்ட், அரைத்த கடலை பருப்பு பேஸ்ட் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

5. இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி, அவற்றை வடையாக வட்டமாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

6.ஒரு கனமான கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், வடையை கடாயில் பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

7.அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி, டிஷ்யூகளை பயன்படுத்தி மட்டன் வடைகளை உலர வைக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான மட்டன் வடை சுவைக்க தயாராகி விட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget