மேலும் அறிய

எந்த வார்த்தை கூறினாலும் உடனடி கவிதை! சேலத்தில் அசத்தும் இல்லத்தரசி!

ஜாக்கி புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டு என்ற புத்தகத்தில் 48 நிமிடங்களில் 150 வார்த்தைகளுக்கு உடனடி கவிதைகளை கூறி சாதனை படைத்துள்ளார்.

சேலத்தில் எந்த வார்த்தையை கூறினாலும், அதற்கு உடனடி கவிதைகளை கூறி, அனைவரையும் வியக்க வைக்கும் இல்லத்தரசி சாந்தினி. கால்நடைகளை மேய்த்துகொண்டே, கவிதை எழுதும் திறனை வளர்த்துக்கொண்ட பெண் குறித்த செய்தி தொகுப்பு பார்ப்போம்.

எந்த வார்த்தை கூறினாலும் உடனடி கவிதை! சேலத்தில் அசத்தும் இல்லத்தரசி!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட விநாயகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தினி (28), இவரது கணவர் அர்த்தநாரி இருவருக்கும் நித்தின் (7) என்ற குழந்தை உள்ளது. இவரது குடும்பம் விவசாயப் பின்னணியில் கால்நடைகள் பராமரிப்பு, விவசாய மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவரும் தினசரி கால்நடைகளைப் பராமரித்து கொண்டு வீட்டு வேலை செய்து வரும் இல்லத்தரசியாக இருந்தாலும், தனது திறமையை வெளி உலகத்திற்கு எப்படியாவது கொண்டு வரவேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எந்த வார்த்தை கூறினாலும் உடனடி கவிதை! சேலத்தில் அசத்தும் இல்லத்தரசி!

பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ள சாந்தினி கவிதை எழுவதில் அதிக திறமை கொண்டவராக இருப்பதால் எந்த வார்த்தையை கூறினாலும், அதற்கு உடனடியாக ஒருவரி முதல் ஐந்து வரிகளுக்கு மேலும் கவிதைகளை கூறி, அனைவரையும் வியக்க வைக்கிறார். கால் நடைகளை பராமரிக்கும் நேரம், வீட்டு வேலைகளை முடித்த பிறகும் இருக்கும் சிறிய ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படித்தும், தனது கற்பனைகளாலும் பல்வேறு கவிதை சொல்லும் திறமைகளை வளர்த்து வைத்துள்ளார். இதற்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து கைவிட வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கிறார். இருப்பினும் குடும்பத்தாருக்கு மட்டுமல்லாமல் உலகிற்கும் தனது திறமையை வெளிக்காட்டும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதற்கு முதல் படியாக ஜாக்கி புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டு என்ற புத்தகத்தில் 48 நிமிடங்களில் 150 வார்த்தைகளுக்கு உடனடி கவிதைகளை கூறி சாதனை படைத்துள்ளார். இந்த 150 வார்த்தைகளும் 5 வரிகளுக்கு மேலான கவிதைகளாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த வார்த்தை கூறினாலும் உடனடி கவிதை! சேலத்தில் அசத்தும் இல்லத்தரசி!

இது மட்டும் போதாது உலகிற்கும் நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் தொடர்ந்து தனது திறமைகளை வளர்த்து வருகிறார். தற்போது 5 ஆயிரம் வார்த்தைகளுக்கு கவிதைகள் சொல்லும் அளவிற்கு திறமையை வளர்த்துக் கொண்டுள்ள சாந்தினி எப்படியாவது தனது திறமையை வெளி உலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

மேலும் இது குறித்து சாந்தினி கூறும்போது இல்லத்தரசி என்று வீட்டிலேயே முடங்கி விடாமல் தங்களுக்குள் உள்ள திறமைகளை வயதைப் பொருட்படுத்தாமல் வெளிக்கொண்டு வந்து வெற்றி பெற்றால் பல்வேறு பெண்களுக்கு முன்னுதாரணமாக மாறும் என்றும் கூறுகிறார். பெண்கள் நினைத்தாள் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக சாந்தினி விளங்கி வருகிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள் உரிமம் பெறுவது அவசியம் !
சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள் உரிமம் பெறுவது அவசியம் !
வீட்டிலேயே தக்காளி செடி வளர்க்கலாம்! ரகசியம் தெரிஞ்சா, அசால்ட்டா அறுவடை பண்ணலாம்!
வீட்டிலேயே தக்காளி செடி வளர்க்கலாம்! ரகசியம் தெரிஞ்சா, அசால்ட்டா அறுவடை பண்ணலாம்!
ஏசி-யை 16 டிகிரியில் வைத்தால் உடலுக்கு ஆபத்தா? நிபுணர்கள் சொல்லும் 'ஷாக்' தகவல்கள் - இனி இதைப் பண்ணாதீங்க
ஏசி-யை 16 டிகிரியில் வைத்தால் உடலுக்கு ஆபத்தா? நிபுணர்கள் சொல்லும் 'ஷாக்' தகவல்கள் - இனி இதைப் பண்ணாதீங்க
வீட்டிலேயே சுவையான உலர் திராட்சை தயாரிப்பது எப்படி? ஒரு கிலோ தயாரிக்க எவ்வளவு திராட்சை தேவை? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
வீட்டிலேயே சுவையான உலர் திராட்சை தயாரிப்பது எப்படி? ஒரு கிலோ தயாரிக்க எவ்வளவு திராட்சை தேவை? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget