மேலும் அறிய

Sridhar Vembu: ’’ஈஸியாக எடுத்துக்காதீங்க; ஐ.டி. வேலைகளுக்கு ஆப்பு வைக்கும் ஏஐ’’- ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை

ஐடி ஊழியர்களுக்கான அதிக ஊதியம் கடைசி வரை நீடிக்கும் என்றும் நாம் கற்பனை செய்துகொள்ள முடியாது- ஸ்ரீதர் வேம்பு .

ஐடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் அதிக ஊதியம் அதிக நாட்களுக்கு நீடிக்காது என்று ஸோஹோ நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:

’’எங்களின் பணியாளர்களின் இதை நான் அடிக்கடி சொல்வேன். மெக்கானிக்கல் பொறியாளர்கள் அல்லது சிவில் பொறியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், வேதியியலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட, சாஃப்ட்வேட் பொறியாளர்கள் அதிகம் ஊதியம் பெறுகிறார்கள். ஆனால் அது அவர்களின் பிறப்புரிமை எதுவும் அல்ல. இதை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த அதிக ஊதியம் கடைசி வரை நீடிக்கும் என்றும் நாம் கற்பனை செய்துகொள்ள முடியாது.

Only the paranoid survive

நம்முடைய பொருட்களுக்காக நிறுவனங்கள் நமக்குப் பணம் செலுத்துவதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது நாம் "சீர்குலைக்கப்படலாம்" என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காகவே. நாம் அவ்வாறு இருக்க மாட்டோம் என்று நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகக் கருதுகிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவ்வாறுதான் இருப்போம். எப்போதும் ஒரு ஆபத்து நிலையை கவனத்தில் கொண்டு செயல்படுபவர்களே நிலைத்திருப்பார்கள் (Only the paranoid survive) என்று இண்டெல் நிறுவனத்தின் Andy Grove கூறுவார்.

மென்பொருள் மேம்பாட்டில் (LLMs + tooling) வரும் உற்பத்தித்திறன் புரட்சி, நிறைய ஐ.டி. வேலைகளை அழிக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இது கவலைக்குரியது என்றாலும் அதை உள்வாங்கிக் கொள்வது முக்கியம்’’.

இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.


Sridhar Vembu: ’’ஈஸியாக எடுத்துக்காதீங்க; ஐ.டி. வேலைகளுக்கு ஆப்பு வைக்கும் ஏஐ’’- ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை

அசுர வேகத்தில் ஏஐ வளர்ச்சி

உலகம் முழுக்க ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும் தேவையும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சர்வதேச பண நிதியம் (IMF) கூறும்போது, உலக அளவில் 40 சதவீத வேலைவாய்ப்புகளை ஏஐ கைக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த கால ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் அனைத்தும் வழக்கமான ஒரே மாதிரியான வேலைகளைத்தான் பாதித்தன. ஆனால் செயற்கை நுண்ணறிவுக்கு, அதி உயர்திறன் தேவைப்படும் வேலைகளில் (high skilled jobs) தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் இருக்கிறது. இது பொருளாதாரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேம்பட்ட பொருளாதாரத்தில் 60 சதவீத வேலைகளில் ஏஐ தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச பண நிதியம் கவலை தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
Embed widget