வேலைவாய்ப்பு திருவிழா: 1000+ வேலைவாய்ப்பு...! உடனடி பணி ஆணை ; உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்திறன் திருவிழா 22.11.2025 திண்டிவனத்தில் நடைபெற உள்ளது

விழுப்புரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்திறன் திருவிழா 22.11.2025 திண்டிவனத்தில் நடைபெற உள்ளது.
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்திறன் திருவிழா 22.11.2025 சனிக்கிழமை அன்று திண்டிவனத்தில் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட உள்ளது.
100க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு
இந்த வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்திறன் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களை சார்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்ற பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பினை தேர்வு செய்யலாம்.
இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்திறன் திருவிழா தொடர்பாக மேலும் விபரங்களை அறிய ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகு, ஊராட்சி அளவில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நகர்ப்புறப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களை தொடர்பு கொண்டு விபரம் பெற்று கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்பவர்கள் இடத்து வர வேண்டிய ஆவணங்கள் :
வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்திறன் திருவிழாவில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்-2 ஆகியவற்றுடன் முகாமில் கலந்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்திறன் திருவிழாவில் கலந்து கொள்ளும் ஆண்கள்/பெண்கள் 18 முதல் 40 வரை உள்ள (இருபாலரும்) கலந்து கொள்ளலாம்,
கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படித்திருக்க வேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்திறன் திருவிழா தொடர்பாக மேலும் விபரம் அறிய அனைத்து வட்டார இயக்க மேலாண்மை அலகு மற்றும் விழுப்புரம் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















