![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Country Chicken Farm: நாட்டுக்கோழிப்பண்ணை அமைத்து கோழி வளர்க 50 சதவீதம் மானியம் - உடனே விண்ணப்பிங்க
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நாட்டு கோழி பண்ணை மைத்து கோழி வளர்க மாநில அரசால் 50 சதவீத மானியத்துடன் வழங்குகிறது.
![Country Chicken Farm: நாட்டுக்கோழிப்பண்ணை அமைத்து கோழி வளர்க 50 சதவீதம் மானியம் - உடனே விண்ணப்பிங்க Tiruvannamalai news apply for 50 percent subsidy to set up a country chicken farm in rural areas - TNN Country Chicken Farm: நாட்டுக்கோழிப்பண்ணை அமைத்து கோழி வளர்க 50 சதவீதம் மானியம் - உடனே விண்ணப்பிங்க](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/7c25c2e95d48d7c389e11fb6f233b4cb1719240618137113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கு கிராம புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்அலகு) நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்த திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 3 பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே நாட்டுகோழி வளர்ப்பில் திறமையும், ஆர்வமுள்ள பயனாளிகள் கீழ்காணும் அரசு விதிமுறைகளின்படி தகுதியிருப்பின் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் (05.07.2024)-க்குள் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிபந்தனைகள்
நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமான செலவு உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் (ரூ1,56,875) மாநில அரசால் வழங்கப்படும் திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும், ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய
நாட்டுக்கோழி குஞ்சுகள், ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும். பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குறியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
விவரங்கள்
மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளி மற்றும் அவர்தம் குடும்பத்தினரோ பயனடைந்திருக்கக் கூடாது கட்டுமான பணிகள் தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும், விண்ணப்பிக்கும் பயனாளிகள் தங்களது ஆதார் அட்டைநகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா அடங்கல் நகல், 50 தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்தின்கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ்களுடன் தங்களது அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)