மேலும் அறிய

Chennai Jobs: 8-வது தேர்ச்சி போதும்; சென்னையில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..

Job Alert: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகம் 

சென்னையிலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையரக அலுவல்கத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி விவரம்

அலுவலக உதவியாளர் - 6

காவலர் - 2

கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளார் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

காவலர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

உரிய உடற்தகுதி சான்று அரசு மருத்துவமனையின் உதவி அறுவை சிகிச்சை மருத்துவரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சம் பொதுப்பிரிவினருக்கு 32-வயது மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின பழங்குடியினர் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி?

கிண்டியில் உள்ள அலுவலகத்தில் அரசு பணி நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பப்படிவத்தை பெற்றுகொள்ளலாம். தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அலுவலகத்திலோ அல்லது அஞ்சல் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

துணை இயக்குநர் (நிர்வாகம்)

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகம் (வேலைவாய்ப்பு பிரிவு)

எண்.42. ஆலந்தூர் ரோடு, 

திரு.வி.க. தொழிற்பேட்டை,

கிண்டி,

சென்னை -600 032

விண்ணப்பிக்க கடைசி நாள் - 30.08.2023  மாலை 5 மணி வரை 

********

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்கு இன்று மதியம் 1 மணி முதல் செப்டம்பர் 18- ம் தேதி 1 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

ஓட்டுநர் 

நடத்துனர்

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு, 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். 

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு www.arasubus.tn.gov.in - என்ற இணையதள முகவரி இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி தேதி- 18.09.2023

இந்த வேலைவாய்ப்பிற்கா கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவரங்கள் குறித்த அப்டேட்களை http://www.arasubus.tn.gov.in/ - என்ற இணையதள முகவரியில் காணலாம்.

***

சவுதி அரேபிய அமைச்சத்தில் பெண் செவிலியர்களாக பணி செய்வதற்கான நேர்காணல் சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான் முழு விவரங்களை இங்கே காணலாம்.

சவுதி அரேபியாவில் வேலை

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நேர்காணல் நடைபெறுவதன் விவரம்

சவுதி அரேபிய அமைச்சகம் பெண் செவிலியர்களுக்கான நேர்காணலை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி வருகிற 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. இதற்கான நேரம் மற்றும் இடம் தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இதற்கு விண்ணப்பிக்க - சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 

ஊதிய விவரம்:

இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com -  என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தொடர்பு எண்கள்

9566239685, 6379179200

044-22505886 - 044-22502267 

இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.com என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.   அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது என்று அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ்நாடு வெறும் பெயர் மட்டும் இல்ல.. அதுதான் எங்க அடையாளம்" கொதிக்கும் முதல்வர் ஸ்டாலின்!
IND vs PAK: டாஸில் வென்றது பாகிஸ்தான்! மேட்ச்சில் வெல்லுமா இந்தியா? அணியில் யார்? யார்? தெரியுமா?
IND vs PAK: டாஸில் வென்றது பாகிஸ்தான்! மேட்ச்சில் வெல்லுமா இந்தியா? அணியில் யார்? யார்? தெரியுமா?
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
"எங்க மேல சேத்தை வாரி இறைக்கிறாங்க" மோடிக்காக பேசிய இத்தாலி பிரதமர் மெலோனி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ்நாடு வெறும் பெயர் மட்டும் இல்ல.. அதுதான் எங்க அடையாளம்" கொதிக்கும் முதல்வர் ஸ்டாலின்!
IND vs PAK: டாஸில் வென்றது பாகிஸ்தான்! மேட்ச்சில் வெல்லுமா இந்தியா? அணியில் யார்? யார்? தெரியுமா?
IND vs PAK: டாஸில் வென்றது பாகிஸ்தான்! மேட்ச்சில் வெல்லுமா இந்தியா? அணியில் யார்? யார்? தெரியுமா?
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
PM SHRI Scheme: ஒரு ஆசிரியர் கூட இல்லை.. நீங்க தான் தமிழ் மொழிய காப்பாத்த போறிங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
"எங்க மேல சேத்தை வாரி இறைக்கிறாங்க" மோடிக்காக பேசிய இத்தாலி பிரதமர் மெலோனி!
TN Govt SC: ஆளுநர் சும்மாவே இருக்கட்டும், உச்சநீதிமன்றம் சொன்னா போதும் - தமிழ்நாடு அரசின் புது ரூட்..!
TN Govt SC: ஆளுநர் சும்மாவே இருக்கட்டும், உச்சநீதிமன்றம் சொன்னா போதும் - தமிழ்நாடு அரசின் புது ரூட்..!
ஓநாயும் வெள்ளாடும் ஒன்னா இருக்க முடியுமா? ஓபிஎஸ், டிடிவி மீது இபிஎஸ் அட்டாக்!
ஓநாயும் வெள்ளாடும் ஒன்னா இருக்க முடியுமா? ஓபிஎஸ், டிடிவி மீது இபிஎஸ் அட்டாக்!
Pope Francis: உலகளாவிய கிறிஸ்துவர்கள் பெரும் சோகம் - போப் ஃப்ரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம், என்ன ஆச்சு?
Pope Francis: உலகளாவிய கிறிஸ்துவர்கள் பெரும் சோகம் - போப் ஃப்ரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம், என்ன ஆச்சு?
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா? புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா?
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா? புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா?
Embed widget