நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்குங்க... அருமையான சம்பளம்: உடனே அப்ளை பண்ணுங்க
தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தில் கீழ் செயல்படும் நான் முதல்வன் திட்டம் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர்: ரூ.1.5 லட்சம் வரை சம்பளம்; நான் முதல்வன் திட்டத்தில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் 126 காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்காங்க. தகுதியானவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க.
தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தில் கீழ் செயல்படும் நான் முதல்வன் திட்டம் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏராளமான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
இணை துணைத் தலைவர் 3
ப்ரோகிராம் மேனேஜர் 21
சீனியர் அசோசியேட் 8
ஜோனல் கணக்கு மேனேஜர் 5
திட்ட அசோசியேட் 35
ஜூனியர் அசோசியேட் 1
இளம் வல்லுநர் 16
ப்ரோகிராம் நிர்வாகி 38
மொத்தம் 126
வயது வரம்பு
இப்பணியிடங்களுக்கு 31.07.2025 தேதியின்படி, இணை துணைத் தலைவர் பதவிக்கு அதிகப்படியாக 50 வயது வரை இருக்கலாம்.
ப்ரோகிராம் மேனேஜர் பதவிக்கு 45 வயது வரை இருக்கலாம். சீனியர் அசோசியேட், ஜோனல் கணக்கு மேனேஜர், திட்ட அசோசியேட் பதவிக்கு 40 வயது வரை இருக்கலாம். ஜூனியர் அசோசியேட், இளம் வல்லுநர் பதவிக்கு அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
இணை துணைத் தலைவர் பதவிக்கு பி.இ/ பி.டெக், எம்பிஏ, காட்சித் தொடர்பு / இதழியல் / ஊடகம் / சந்தைப்படுத்தல் அல்லது இதற்கு தொடர்புடைய முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 7 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் தேவை. ப்ரோகிராம் மேனேஜர் பதவிக்கு எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சீனியர் அசோசியேட் பதவிக்கு பொறியியல், ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு, எம்பிஏ, மீடியா சார்ந்த படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் தேவை.
ஜோனல் கணக்கு மேனேஜர் பதவிக்கு பொறியியல் படிப்புடன் 3 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் தேவை.
திட்ட அசோசியேட் பதவிக்கு பொறியியல் அல்லது எம்பிஏ அல்லது ஏதேனும் ஒரு முதுகலை பட்டப்படிப்பு ஆகியவை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 4 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் தேவை.
ஜூனியர் அசோசியேட் பதவிக்கு பொறியியல் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பபை முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை. இளம் வல்லுநர் பதவிக்கு பொறியியல், கணினி அறிவியல் அல்லது ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 1 ஆண்டு மேலான அனுபவம் தேவை.
ப்ரோகிராம் நிர்வாகி பதவிக்கு எம்பிஏ அல்லது தொடர்புடைய முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இணை துணைத் தலைவர் பதவிக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். ப்ரோகிராம் மேனேஜர் பதவிக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். சீனியர் அசோசியேட் பதவிக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். ஜோனல் கணக்கு மேனேஜர் பதவிக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். திட்ட அசோசியேட் பதவிக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். ஜூனியர் அசோசியேட் பதவிக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இளம் வல்லுநர் பதவிக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். ப்ரோகிராம் நிர்வாகி பதவிக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதார்கள் புகைப்படம், கையொப்பம், அடையாள அட்டை, வீட்டு முகவரி, கவ்லித்தகுதி சான்றிதழ் மற்றும் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் 11 மாத கால அளவில் ஒப்பந்த முறை பணியமர்த்தப்படுவார்கள். தேவையின் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.
Before You Go
Job Recruitment : மாதம் ரூ.1லட்சம் வரை சம்பளம்..! விண்ணப்பிப்பது எப்படி..?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















