மேலும் அறிய

மயிலாடுதுறை: 12-வது முடித்தவர்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணி வாய்ப்பு; மே 4-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அறிவுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை நட்பு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் பணியாற்ற ஆர்வமுள்ள சட்ட தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers) வரவேற்கப்படுவதாக மாவட்ட அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான முனைவர் எல்.எஸ். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சாராம்சம் பின்வருமாறு:

நோக்கமும் பணியின் தன்மையும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுக்களின் செயல்பாடுகளை வலுப்படுத்த இந்தத் தேர்வு நடைபெறுகிறது. குறிப்பாக, குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், குழந்தைகளுக்கு எதிரான கடத்தல் குற்றங்களைத் தடுத்தல் மற்றும் அடிமைத்தனத்திலிருந்து குழந்தைகளை மீட்டெடுத்தல் போன்ற மிக முக்கிய சமூகப் பணிகளுக்காக இந்த தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுவர்.

மீட்கப்படும் குழந்தைகளுக்கு முறையான மறுவாழ்வு அளிப்பதுடன், அவர்களுக்குத் தடையற்ற கல்வி கிடைப்பதை உறுதி செய்து, ஒரு பாதுகாப்பான மற்றும் குழந்தை நட்பு சமுதாயத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சட்ட ரீதியான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்லும் பாலமாகச் செயல்படுவார்கள்.

முக்கிய நிபந்தனைகள்

இந்தத் தன்னார்வலர் பணியானது முற்றிலும் ஒரு சேவை நோக்கம் கொண்டது என்பதைத் தலைமை நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இது ஒரு நிரந்தர அரசுப் பணி அல்ல. இது முற்றிலும் தற்காலிகமானது மற்றும் இதற்கு அடிப்படைச் சம்பளம் அல்லது மாதாந்திர ஊதியம் எதுவும் கிடையாது. தன்னார்வலர்கள் மேற்கொள்ளும் சேவைக்குத் தகுந்தவாறு அரசு நிர்ணயித்துள்ள தினசரி மதிப்பூதியம் (Honorarium) மட்டுமே வழங்கப்படும். எனவே, சேவை மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் வயதுத் தகுதி

விண்ணப்பதாரர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பு (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். எனினும், பட்டதாரிகள் மற்றும் சமூகப் பணி (Social Work), உளவியல் (Psychology) அல்லது அது சார்ந்த துறைகளில் கல்வித் தகுதி பெற்றவர்களுக்குத் தேர்வின் போது முன்னுரிமை அளிக்கப்படும்.

சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு உடையவர்கள் இந்தத் தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.

பணிக்காலம் மற்றும் தேர்வு முறை

தேர்ந்தெடுக்கப்படும் சட்ட தன்னார்வலர்கள் முதற்கட்டமாக ஓராண்டு காலத்திற்குப் பட்டியலிடப்படுவர். அந்த ஓராண்டு காலத்தில் அவர்களின் செயல்பாடுகள், அர்ப்பணிப்பு மற்றும் களப்பணிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரின் பரிந்துரையின் பேரில் அவர்களின் பணிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நடத்தப்படும். நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் மற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் குறித்த அனைத்துத் தகவல்களும் மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். இதற்காகத் தனியாக அஞ்சல் வழித் தகவல்கள் அனுப்பப்படமாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவங்களை மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற இணையதளமான https://mayiladuthurai.dcourts.gov.in/என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து, வருகின்ற 04.05.2026 ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது பதிவுத் தபால் (Registered Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் முனைவர் எல்.எஸ். சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக மாற்றத்திற்காகப் பங்காற்ற விரும்பும் தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
Tamilnadu Round Up: டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
ADMK: ”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
TN By-Election: இடைத்தேர்தல் DMKவிற்கு சாதகமா? 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வி வரலாறு என்ன? TVK சாதிக்குமா?
இடைத்தேர்தல் DMKவிற்கு சாதகமா? 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வி வரலாறு என்ன? TVK சாதிக்குமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
Tamilnadu Round Up: டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
ADMK: ”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
TN By-Election: இடைத்தேர்தல் DMKவிற்கு சாதகமா? 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வி வரலாறு என்ன? TVK சாதிக்குமா?
இடைத்தேர்தல் DMKவிற்கு சாதகமா? 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வி வரலாறு என்ன? TVK சாதிக்குமா?
EPS ADMK: தென் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக காலியான அதிமுக கூடாரம்.! கதி கலங்கி நிற்கும் இபிஎஸ்- அடுத்தது என்ன.?
தென் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக காலியான அதிமுக கூடாரம்.! கதி கலங்கி நிற்கும் இபிஎஸ்- அடுத்தது என்ன.?
Thirumavalavan: தவெக ஆட்சி கவிழ ஒருபோதும் விடமாட்டோம்.. திருமாவளவன் உறுதி!
தவெக ஆட்சி கவிழ ஒருபோதும் விடமாட்டோம்.. திருமாவளவன் உறுதி!
CM Vijay: டெல்லி செல்லும் சிஎம் விஜய்..! தமிழகத்தின் நிதி பிரச்னைகள் தீருமா? மத்திய அரசு கை கொடுக்குமா?
டெல்லி செல்லும் சிஎம் விஜய்..! தமிழகத்தின் நிதி பிரச்னைகள் தீருமா? மத்திய அரசு கை கொடுக்குமா?
Singappen Special Task Force : சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு சூப்பர் யூனிபார்ம்.! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு சூப்பர் யூனிபார்ம்.! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
Embed widget