மேலும் அறிய

ஆசிரியர் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு: மயிலாடுதுறையில் அரசு பள்ளியில் 38 ஆசிரியர் பணியிடங்கள் - ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

மயிலாடுதுறை ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள 38 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூலை 6-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 38 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு (SMC) மூலமாக, தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியான நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு;

காலிப்பணியிடங்களின் விவரங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வண்ணம், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தற்போது தற்காலிக ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. காலிப்பணியிடங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

1. இடைநிலை ஆசிரியர்கள் (28 பணியிடங்கள்):

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 28 இடைநிலை ஆசிரியர் (Secondary Grade Teacher) பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

2. பட்டதாரி ஆசிரியர்கள் (05 பணியிடங்கள்):

கொண்டல், மாதானம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் திருக்குளம்பியம் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் காலியாக உள்ள 5 பட்டதாரி ஆசிரியர் (Graduate Teacher) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

பாடவாரியான காலிப்பணியிட விவரம்

 * தமிழ் – 1

 * ஆங்கிலம் – 1

 * கணிதம் – 1

 * அறிவியல் – 1

 * சமூக அறிவியல் – 1

3. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (05 பணியிடங்கள்)

மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (Post Graduate Teacher) பணியிடங்களும் இந்த அறிவிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் பாடவாரியான காலிப்பணியிட விவரம்

* கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி: இயற்பியல் - 1 பணியிடம்.

* காரைமேடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி: பொருளாதாரம் - 1 பணியிடம்.

* மாதானம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி: உயிரியல் - 1, வேதியியல் – 1, இயற்பியல் – 1 என மொத்தம் 3 பணியிடங்கள்.

மேற்கண்டவாறு இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் என மொத்தம் 38 காலிப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு (SMC) வழியாக, தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் உடனடியாக நிரப்பப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் முக்கிய தேதிகள்

இத்தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள காலக்கெடுவிற்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் காலம்: 01.07.2026 முதல் 06.07.2026 வரை.

கடைசி நாள் மற்றும் நேரம்: 06.07.2026 அன்று மாலை 05.45 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது முறையான எழுத்து மூலமான விண்ணப்பங்களை (Written Application), உரிய கல்வித்தகுதி சான்றுகளின் நகல்களுடன் 3 பிரதிகளாக (3 Sets of Xerox) இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் (Postal) மூலமாகவோ கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்கலாம்.

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மயிலாடுதுறை.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த வேலைவாய்ப்பு முற்றிலும் தற்காலிகமானது மற்றும் தொகுப்பூதிய அடிப்படையிலானது ஆகும். அரசு விதிமுறைகளின்படி, அந்தந்த பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக்குழு (SMC) மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் உயரவும், ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கவும் இந்த தற்காலிக நியமனம் மேற்கொள்ளப்படுவதால், தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின், அதாவது 06.07.2026 மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget