Ekalavya Recruitment: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி; 7,267 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!
Ekalavya Recruitment 2025: இதில் முதல்வர் (225), பட்டதாரி ஆசிரியர் (3,962), விடுதிக் காப்பாளர் (635), இளநிலை செயலக உதவியாளர் (228), கணக்காளர் (61) மற்றும் உதவி அதிகாரி (1,606) போன்ற பல பதவிகள் உள்ளன

மத்திய அரசின் ஏகலைவா உறைவிடப் பள்ளிகளில் (EMRS) 7,267 ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பப் பதிவுக்கு நாளை (அக்.23) கடைசித் தேதி ஆகும்.
ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் (EMRS) என்பது இந்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆகும். நவோதயா வித்யாலயா பள்ளிகளைப் போலவே, இந்தப் பள்ளிகளும் பழங்குடியின மாணவர்களுக்குத் தரமான கல்வியுடன், உணவு மற்றும் தங்குமிடத்தை இலவசமாக வழங்குகின்றன.
இந்த அரசுப் பள்ளிகளில், கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 7,267 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
என்னென்ன பணியிடங்கள்?
இதில் முதல்வர் (225), பட்டதாரி ஆசிரியர் (3,962), விடுதிக் காப்பாளர் (635), இளநிலை செயலக உதவியாளர் (228), கணக்காளர் (61) மற்றும் உதவி அதிகாரி (1,606) போன்ற பல பதவிகள் உள்ளன.
என்ன தகுதி?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 10ஆம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டப் படிப்புகள் அல்லது பி.எட்., நர்சிங் போன்ற சம்பந்தப்பட்ட துறையில் உள்ள பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி மாறுபடுகிறது.
வயது வரம்பு என்ன?
வயது வரம்பைப் பொறுத்தவரை, முதல்வர் பதவிக்கு 50 வயதுக்குள்ளும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு பொதுவாக 30 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்டோபர் 23) கடைசி தேதி ஆகும். ஆர்வமுள்ளவர்கள் https://nesms.tribal.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை எப்படி?
எழுத்துத் தேர்வு (தாள் 1 மற்றும் தாள் 2),
திறன் தேர்வு,
நேர்காணல்,
ஆவணச் சரிபார்ப்பு.
கூடுதல் தகவல்களுக்கு: https://nesms.tribal.gov.in/






















