மேலும் அறிய

மத்திய அரசு நிறுவனத்தில் 102 காலி பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க... விபரங்கள் உள்ளே!!! 

பாதுகாப்பு பிரிவில் உள்ள தலைமை அதிகாரி பதவிக்கு மட்டும் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 102 பணியிடங்களை நிரப்ப இருக்காங்க. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பலன் பெறலாம்.

மத்திய அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி, நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 102 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் எரிப்பொருள் உற்பத்தி நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தகுதிகள் என்ன, விண்ணப்பிப்பது எப்படி என்ற விபரங்கள் முழுமையாக உங்களுக்காக!!!

மேற்பார்வை பொறியாளர் 3
தலைமை அதிகாரி 97
செயலாளர் 1
இந்தி அதிகாரி 1
மொத்தம் 102  காலிபணியிடங்களை நிரப்ப இருக்காங்க. அதற்கான அறிவிப்புதான் வெளியாகி உள்ளது. 

வயது வரம்பு... யார் யாருக்கு எப்படி?

இப்பணியிடங்களுக்கு 26.09.2025 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதவிகளுக்கு ஏற்ப உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்பார்வை பொறியாளர் பதவிக்கு பொதுப்பிரிவினருக்கு அதிகபடியாக 32/34 ஆகவும், எஸ்சி பிரிவினருக்கு 37/39ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதர பதவிகளுக்கு அதிகபடியாக 27ஆகவும், ஒரு சில பதவிகளுக்கு 29 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு உள்ளது.

எந்த பதவிக்கு என்ன கல்வித்தகுதி வேணும்?

மேற்பார்வை பொறியாளர் பதவிக்கு 65 சதவீத பொறியியல் பட்டப்படிப்புடன் 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பெட்ரோலியம், தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தலைமை அதிகாரி பதவிக்கு வேதியியல் அறிவியல் பட்டப்படிப்பு, கெமிக்கல் பொறியியல், சிவில் பொறியியல், எலெக்ட்ரிக்கல் பொறியியல், பெட்ரோலியம் பொறியியல், ICAI/ICMAI, கணினி அறிவியல்/ ஐடி, மெக்கானிக்கல், தீ மற்றும் பாதுகாப்பு, சமூக சேவை, சுற்றுச்சூழல் அறிவியல், புவி இயற்பியல், புவியியல், சட்டம், எம்பிஏ மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்களும் பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.

செயலாளர் பதவிக்கு பட்டப்படிப்புடன் செயலகப் பயிற்சி/ நவீன அலுவலக மேலாண்மை/ செயலகப் பயிற்சி/ நிர்வாக உதவியாளர் ஆகியவற்றில் 2 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டு அனுபவம் தேவை. இந்தி அதிகாரி பதவிக்கு இந்தியில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எந்தெந்த பதவிக்கு எவ்வளவு சம்பளம்

மேற்பார்வை பொறியாளர் பதவிக்கு ரூ.80,000 முதல் அதிகபடியாக ரூ.2,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். தலைமை அதிகாரி பதவிக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும். செயலாளர் பதவிக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சமபளம் வழங்கப்படும். இந்தி அதிகாரி பதவிக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் விதம்

இப்பணியிடங்களில் மேற்பார்வை பொறியாளர் மற்றும் தலைமை அதிகாரி பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். இதர பதவிகளுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்படும். பாதுகாப்பு பிரிவில் உள்ள தலைமை அதிகாரி பதவிக்கு மட்டும் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தங்களின் விவரங்களின் ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்கலாம். https://www.oil-india.com/advertisement-list என்ற இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் கிடையாது. இதற்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் பெறப்பட தொடங்கிய நிலையில், செப்டம்பர் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழி தேர்வு நவம்பர் 1-ம் தேதி நடைபெறும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
Embed widget