அஞ்சல் துறையில் 28,740 வேலைவாய்ப்புகள்! 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! உடனே விண்ணப்பியுங்கள்!
அஞ்சல் துறை (India Post) நாடு முழுவதும் உள்ள அஞ்சல் வட்டங்களில் காலியாக உள்ள கிராமின் டாக் சேவக் (Gramin Dak Sevak - GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை (India Post) நாடு முழுவதும் உள்ள அஞ்சல் வட்டங்களில் காலியாக உள்ள கிராமின் டாக் சேவக் (Gramin Dak Sevak - GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 28,740 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு வட்டத்தில் மட்டும் 2,009 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இதுவொரு அரிய வாய்ப்பாகும்.
இந்த வேலைவாய்ப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜனவரி 31, 2026 அன்று தொடங்கியது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 14, 2026 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான indiapostgdsonline.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அவகாசம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு (Mathematics மற்றும் English பாடங்களுடன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், உள்ளூர் மொழி அறிவு, கணினி இயக்கும் திறன் மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருத்தல் அவசியம். வயது வரம்பைப் பொறுத்தவரை, 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு எதுவும் நடத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. 10-ம் வகுப்பில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் (Merit List) தயார் செய்யப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் மெரிட் பட்டியல் பிப்ரவரி 28, 2026 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குப் பணிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.
ஊதியம் விபரம்
1. கிளை அஞ்சல் அதிகாரி (BPM): ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை.
2. உதவி கிளை அஞ்சல் அதிகாரி (ABPM) / GDS: ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை.
3. indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்யவும்.விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தவும்.தேவையான ஆவணங்களை (புகைப்படம், கையொப்பம், மதிப்பெண் சான்றிதழ்) பதிவேற்றம் செய்யவும்.விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, எதிர்காலத் தேவைக்காகப் பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















