மேலும் அறிய

தமிழகத்தில் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செயற்கை முறை கருத்தரிப்பு வணிகமயமாவதை தடுக்கும் வகையில், சென்னை மற்றும் திருச்சியில் செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சை மையம் பரிட்சார்த்த முறையில் தொடங்கப்பட உள்ளது. 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி 27 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். மருத்துவ படிப்பை நிறைவு செய்த 107 பேருக்கு பட்டங்களை அவர் வழங்கினார். விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அவ்வப்போது கழுவுதல் போன்ற விதிமுறைகள் அமலில் உள்ளன. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மற்றும் அரசின் விதிமுறைகள் கடைபிடிப்பதன் மூலமாகவே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

தமிழகத்தில் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா..? -  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 700 தாண்டி கொரோனா தொற்று உள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களில் 95 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 5 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. பொதுமக்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் அரசு மருத்துவமனை வளாகங்களிலேயே சித்தா கொரோனா கேர் மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்வதை உறுதி படுத்திட வேண்டும். இது உலகம் முழுவதும் நிருபணம் ஆகி உள்ளது. இதன் காரணமாகவே தமிழக முதல்வர் தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறார். தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 95 சதவீதம் பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 85 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர், முதல் தவணை கூட செலுத்திக் கொள்ளாமல் 39 லட்சம் பேரும், 2-ம் தவணை செலுத்தாமல் 1.12 கோடி பேரும் உள்ளனர். முதல் தடுப்பூசி மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி பூஸ்டர்  தடுப்பூசி செலுத்தி கொள்ள வலியுறுத்தி வருகின்றோம். மெகா தடுப்பூசி முகாமகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி நடத்திட உள்ளோம்.  இதில் முதல், இரண்டாம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும்.  தமிழகத்தில் 86 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி போன்று பூஸ்டர்  ஊசியும் இலவசமாக செலுத்த மத்திய  அரசை வலியுறுத்தி வருகிறோம். தற்போது புது முயற்சியாக தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தனியார் பங்களிப்போடு CSR முறையில் இலவசமாக பூஸ்டர் ஊசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

 தமிழகத்தில் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா..? -  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மேலும், கரு முட்டை விவகாரத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை அதிகாரியின் அறிக்கை வந்தவுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். செயற்கை முறை கருத்தரிப்பு வணிகமயமாவதை தடுக்கும் வகையில், சென்னை மற்றும் திருச்சியில் செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சை மையம் பரிட்சார்த்த முறையில் தொடங்கப்பட உள்ளது.  முதல்வர் நலமுடன் உள்ளதாகவும் நாளை அலுவலகத்திற்கு வருகை தர உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். சேலம், திருச்சி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிகள் தற்போது மாணவர் சேர்க்கை தலா 100 இடங்கள் என்பதை 250 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களை 250 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Embed widget