மேலும் அறிய

‛400 பேருக்கு டெங்கு பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு‛ -அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி!

தமிழகத்தில் இதுவரை 400 பேரை டெங்கு பாதித்திருப்பதாகவும், அதில் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 27 லட்சத்தைக் கடந்துள்ளது. மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தடம் பதித்த கரோனா பரவல், இன்றளவும் நீடித்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிய பிறகு பாதிப்பு குறைந்ததே தவிர முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், மாநிலம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 27,00,593-ஆக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, வெள்ளிக்கிழமை மேலும் 1,039 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் அதிகபட்சமாக சென்னையில் 126 பேருக்கும், கோவையில் 118 பேருக்கும், செங்கல்பட்டில் 88 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொருபுறம், நோய்த் தொற்றிலிருந்து மேலும் 1,229 போ் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.52 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 11 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,083-ஆக அதிகரித்துள்ளது.

‛400 பேருக்கு டெங்கு பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு‛ -அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26ம் தேதி 23 ஆயிரங்களில் 25.04 லட்சம் பேருக்கும், கடந்த 3ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.19 லட்சம் பேருக்கும், கடந்த 10ம் தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.52 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோணா மூன்றாவது அலை அச்சுறுத்தல்கள் மெல்ல தலைதூக்கும் நிலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவ மழை வேறு துவங்குவதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுதியுள்ளார். கொசுக்கள் வளர்வதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்காமல் சுகாதாரம் பேணுமாறு சுகாதார துறை மக்களிடம் வலியுறுத்தி வருகிறது.

‛400 பேருக்கு டெங்கு பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு‛ -அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி!

இது தொடர்பாக, சென்னையில் இன்று (அக். 29) செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் இதுவரை 400 பேர் டெங்குவால் பாதித்துள்ளனர். அதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொசுக்களால் நோய் வேகமாக பரவும் வாய்பிருப்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் வேண்டும். அது மட்டுமின்றி பல நாடுகளில் மூன்றாவது அலை அதிகரித்து வருகிறது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும். தமிழகத்தில் புதிய வகை கொரோணா அச்சம் வேண்டாம். அதிகமாக தொற்று ஏற்படும் இடங்களிலிருந்து மாதிரிகளை எடுத்து, சென்னையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்தபோது, 84% டெல்டா வகை கரோனா தொற்று பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது. மீதி 16% சாதாரண கரோனா வைரஸ் தான். ஏற்கெனவே 13 பேருக்கு மட்டும்தான் டெல்டா பிளஸ் வகை கரோனா தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில் இதுவரை எந்த புதிய வகை கரோனா தொற்றும் ஏற்படவில்லை. இனியும் ஏற்படாது என நம்புவோம்" என தெரிவித்தார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
India Vs Pakistan: “நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
“நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்
"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
Embed widget