மேலும் அறிய

செப்டம்பரில் ‛ஸ்பூட்னிக் வி’ தயாரிப்பினை தொடங்கும் சீரம் நிறுவனம்!

ஸ்பூட்னிக் வி தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் கொரோனா தொற்றுக்கு எதிராக விரைந்து செயல்படுவதாகவும் பல நாடுகளின் தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவில் சீரம் நிறுவனம் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை துவங்கவுள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 300 மில்லியன் தடுப்பூசி தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் கொரோனா தொற்றின் 2 வது அலை மிகப்பெரிய அளவிலான பாதிப்பினை மக்களுக்கு ஏற்படுத்தியது. இதன் காரணமாக நம் சொந்தங்கள் பலவற்றினை இழக்க நேரிட்டது. இந்நிலையில் தான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக அமையும் என இதற்கான பணிகளை அரசு மேற்கொண்டது. முதலில் சீரம் நிறுவனத்தில் கோவிஷூல்டு முன் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில், அடுத்ததாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.  இருந்தப்போதும் கொரோனா பரவலைக்கட்டுக்கள் கொண்டு வர முடியாமலும், தடுப்பூசி பற்றாக்குறையினால், அவசர காலப்பயன்பாட்டிற்காக ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசிக்கு  அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷூல்டு, ஸ்பூட்னிக் ஆகியவை செயல்பாட்டில் உள்ளது. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


  • செப்டம்பரில் ‛ஸ்பூட்னிக் வி’ தயாரிப்பினை தொடங்கும் சீரம் நிறுவனம்!

இந்த சூழலில் தற்போது கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், கொரோனாவின் புதிய மாறுபாட்டின் காரணமாக மக்கள் மிகப்பெரியப் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஆல்பா, டெல்டா, கப்பா ஆகிய மாறுபட்ட வைரஸ்கள் உருவாகி வரும் நிலையில் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணிகளை துரிதப்படுகின்றனர்.  ஏற்கனவே இந்தியாவில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி செய்வதற்காக இதுவரை 5 இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த நிலையில், சீரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  மேலும்  இதன் மூலம் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் சுமார் 50 சதவீதம் இந்தியர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் தான்,  செப்டம்பர் மாதம் முதல்  ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ரஷ்யாவில் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் நேரடி முதலீடு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 300 மில்லியன் தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே  ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தினை பகிர்ந்து கொண்டதையடுத்து தற்பொழுது முதல் கட்ட பணிகளில் சீரம் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் ரஷ்யா நேரடி முதலீட்டு நிறுவனம் கூறியுள்ளது. 


  • செப்டம்பரில் ‛ஸ்பூட்னிக் வி’ தயாரிப்பினை தொடங்கும் சீரம் நிறுவனம்!

இதனையடுத்து இந்த அறிவிப்புக்குறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதார் பூனாவாலா அவரது கருத்தினைப் பகிர்ந்து உள்ளார். அதில், ஸ்புட்னிக் தடுப்பூசியினை தயாரிக்க ரஷ்யாவுடன் சேருவதில் மிகுந்த மகிழ்ச்சி எனவும், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசிக்கான சோதனைகள் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்  அதிக செயல்திறன் மற்றும் பாதுகாப்புகளை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனையின் இறுதியில், வரும் மாதங்களில் மில்லியன் கணக்கில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.


  • செப்டம்பரில் ‛ஸ்பூட்னிக் வி’ தயாரிப்பினை தொடங்கும் சீரம் நிறுவனம்!

குறிப்பாக கொரோனா, டெல்டா ப்ளஸ் கொரோனா ஆகிய வைரசுகளுடன் 90 சதவீதம் போராடும் வல்லமை கொண்டுள்ளதாக ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசி செயல்படுவதாக விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.  மேலும் இதுவரை ஸ்பூட்னிக் வி தடுப்பூசியினை 67 நாடுகள் பதிவு செய்துள்ளது. மேலும் அர்ஜென்டினா, செர்பியா, பஹ்ரைன், ஹங்கேரி, மெக்ஸிகோ, சான் மரினோ, ஐக்கிய அரபு மற்றும் பல நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் படி, ஸ்பூட்னிக் வி தடுப்பூசி பாதுகாப்பானதாக மற்றும்  கொரோனா தொற்றிற்கு எதிராக விரைந்து செயல்படுகிறது  எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget