திருவண்ணாமலை : புதிதாக இன்று 76 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..
திருவண்ணாமலையில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்றால் இன்று 76 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு கடந்த 2020 மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 21 மாதங்களில் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை உட்பட மொத்தம் 55,464 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்திருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருக்கிறது. கடந்த 1ம் தேதி நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 6 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால், நேற்று தொற்றினால் பாதித்தோரின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்திருந்தது.
இதுவரை மாவட்டத்தில் 55 ஆயிரத்து 626 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 54 ஆயிரத்து 707 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 76 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 673-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தொற்று க்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை பழைய மருத்துவமனை மற்றும் மருத்துவக்கலூரி மருத்துவமனை, செய்யார் மருத்துவமனையில் போன்ற இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது 246 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்தும் , பாதிப்பு வெகுவாகக் அதிகாரிக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் வெளியானவையாகும். வெளி மாவட்டங்களில் பரிசோதனை செய்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 150 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டு அமைக்கும் பணி, மற்றும் அதே வளாகத்தில் ஆயுஷ் மருத்துவமனையில் 54 படுக்கைகளுடன் கொரோனாவுக்கான சித்தா சிகிச்சை சிறப்பு வார்டு அமைக்கும் பணியை நேற்று கலெக்டர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது,

கொரோனா சிறப்பு வார்டில் ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளையும் ஒருங்கிணைந்து ஏற்படுத்த வேண்டும், காரோனா தொற்று கண்டறியப்படும் நபர்களை ஆரம்ப நிலையிலேயே தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை அளிக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் தாமதமின்றி பரிசோதனை செய்து கொள்ளுங்கள் திருவண்ணாமலை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார் தெரிவித்ததாவது:கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்ததும், தயக்கமின்றி, தாமதமின்றி பரிேசாதனை செய்துகொள்வது அவசியம். ஆரம்ப நிலையில் தொற்று கண்டறியப்பட்டால், அதிலிருந்து விடுபடுவது மிகவும் எளிது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டாலும், போதுமான அறை வசதியிருந்தால் டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறலாம் என்றார் .



















