மேலும் அறிய

100 சதவித கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி முன்னுதாரணமாக விளங்கும் சோழன் மாளிகை ஊராட்சி...!

18 வயது நிரம்பிய 1,950 பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இரண்டு மாதத்தில் ஒருவர் கூட கொரோனா தொற்று பாதிப்பில்லாமல் கண்காணித்து வருகின்றோம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே 100 சதவீதம் கரோனோ தடுப்பூசி செலுத்திய ஊராட்சி சார்பில் இன்று காலை சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து சுகாதாரப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கு இதுதொடர்பாக பரிந்துரையை வழங்கியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் சோழன்மாளிகை ஊராட்சி உள்ளது. இங்கு 9 வார்டுகளில் 962 வீடுகள் உள்ளது. இதில் 18 வயதுக்கு மேல் 1,950 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தப்பட்டு, 100 சதவீதம் பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

100 சதவித கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி முன்னுதாரணமாக விளங்கும் சோழன் மாளிகை ஊராட்சி...!

விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். விழாவில் பட்டீஸ்வரம்  வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் பிரேமா, மருத்துவ அலுவலர் புனிதவதி மற்றும் சுகாதார பணியாளர்கள், ஊராட்சி மன்ற செயலர்,  ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயக்குமார் கூறுகையில்,

கொரோனா முதல் அலை வந்தபோது நாங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக  கடைபிடித்தோம். மேலும் தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலை வந்தபோது பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வீட்டுக்கு வீடு சென்று மருத்துவப் பரிசோதனைகள் செய்தும், முகக்கவசங்களையும் வழங்கினோம், வாரம் இருமுறை ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

முதன்முதலாவதாக தீயணைப்பு துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தொளிக்கப்பட்டது எங்கள் ஊராட்சியில்தான். வாரந்தோறும் இரண்டு முறை அனைத்து தெருக்களில் கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர், சுண்ணாம்பு பவுடரை தெளித்து வருகின்றோம். எங்கள் ஊராட்சிக்கு தேவையான அளவில் கிருமி நாசினி பவுடர்கள் இருப்பு உள்ளன. ஊராட்சி முழுவதுமுள்ள சுவர்களில் கொரோனோ விழிப்புணர்வு சுவரொட்டிகளும், எச்சரிக்கையும் வரையப்பட்டது. இதனால் கிராம மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தனர்.

100 சதவித கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி முன்னுதாரணமாக விளங்கும் சோழன் மாளிகை ஊராட்சி...!

கொரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழி்ப்புணர்வு ஏற்படுத்தி கிராமத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது என்றார்.

இதுகுறித்து பட்டீஸ்வரம் அரசு வட்டார துணை மருத்துவமனை மருத்துவ அலுவலர் புனிதவதி கூறுகையில்,

பட்டீஸ்வரம் மருத்துவமனைக்கு 11 ஊராட்சிகள் உள்ளது.  இதில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது 38 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதும், சோழன்மாளிகை ஊராட்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தனர். அதன்படி 18 வயது நிரம்பிய 1,950 பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கோவிஷில்ட், கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளே பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாதத்தில் ஒருவர் கூட கொரோனா தொற்று பாதிப்பில்லாமல் கண்காணித்து வருகின்றோம்.

தற்போது இந்த ஊராட்சியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, இதன் விவரத்தை  மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளோம். தமிழக அளவில் இந்த ஊராட்சி மூன்றாவது ஊராட்சியாகவும், தஞ்சை மாவட்ட அளவில் முதல் ஊராட்சியாகவும், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராட்சியாக சுகாதாரத் துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதையடுத்து இந்த கிராம மக்கள் சார்பில் இன்று,  சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது என்றார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget