மேலும் அறிய

Director Bala Birthday: கம் பேக் படமாக அமையுமா வணங்கான்? இயக்குநர் பாலாவின் 58 ஆவது பிறந்தநாள்

வணங்கான் திரைப்பட இயக்குநர் பாலாவிற்கு இன்று 58 ஆவது பிறந்தநாள். பாலாவின் படங்களை ஒரு குட்டி விசிட் பார்க்கலாம்

இயக்குநர் பாலா


Director Bala Birthday: கம் பேக் படமாக அமையுமா வணங்கான்? இயக்குநர் பாலாவின் 58 ஆவது பிறந்தநாள்

பாலாவின் சுயசரிதையை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம்  கலைக்கு எந்த வித தொடர்புமில்லாத ஒருவராக தான் பாலாவின் இளமை இருந்தது என்று. தேனி , மதுரை என தென் மாவட்டங்களில் வளரும் ஒரு சராசரி கிராமத்து இளைஞனாக தான் அவரின் இளமைப் பருவம் அடாவடித்தனங்கள் நிறைந்ததாக இருந்திருக்கிறது. சின்ன சின்ன அடிதடியில் இருந்து வெட்டுக்காயங்கள் வாங்கும்வரை. ஊரில் இருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்று பேசித்தான் அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். இன்று தமிழ் சினிமாவில் வெகுஜன திரைப்படங்களை உளப்பூர்மவாக அனுகிய இயக்குநர்களில் பாலாவும்  ஒருவர்.

பாலாவின் முதல் படமான சேது படத்தை பெரும்பாலான விநியோகஸ்தர்கள் வெளியிட மறுத்துவிட்டார்கள். மிக குறைந்த திரையரங்குகளில் வெளியாகி படத்தைப் பற்றி மக்கள் பேசக் கேட்டு அடுத்த அடுத்த நாட்களில் கூட்டத்தை திரளவைத்தார் பாலா. சினிமாவில் பிரேக் தேடிக் கொண்டிருந்த விக்ரமின் கரியரில் மிகப்பெரிய படமாக அமைந்தது சேது.

அடுத்தபடியாக சூர்யாவுடன் நந்தா , பிதாமகன் , ஆர்யாவுடன் நான் கடவுள் , என வரிசையாக அவர் படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. எந்த வித கமர்ஷியல் அம்சமும் இல்லாத நான் கடவுள் மாதிரியான ஒரு படம் அவ்வளவு பெரிய மக்கள் திரளிடம் எப்படி ஆதரவை பெற்றது என்பது ஆச்சரியமளிக்கக் கூடியது. 

விளிம்பு நிலை மக்களின் கதைகளின் வழியாக எதார்த்தத்தின் கொடூரமான தன்மையை நேரடி சித்திரங்களாக காட்டக் கூடியவை இயக்குநர் பாலாவின் படங்கள்.

அதே நேரம்  மரணத்தை மனிதனின் முழுமையான விடுதலையாக ஏதோ ஒரு வகையில் முன்வைக்க முயல்கின்றன பாலாவின் படங்கள். பாலாவின் படங்களின் பொது அம்சங்கள் என இவற்றை கூறலாம்.

அழகற்றதின் அழகிய


Director Bala Birthday: கம் பேக் படமாக அமையுமா வணங்கான்? இயக்குநர் பாலாவின் 58 ஆவது பிறந்தநாள்

பாலாவின் கதைக்களங்கள் பெரும்பாலும் சமூகத்தில் விளிம்பு நிலை மக்களைப் பற்றியதாகவே இருந்திருக்கிறன. நவீனமயமாகிக் கொண்டுவரும் உலகத்தில் வெளிச்சத்திற்கே வராத மனிதர்களின் கதைகளை தனது படங்களில் படம்பிடித்து காட்டுகிறார். மாற்றுத்திறனாளிகள், திருடர்கள், பினம் எறிப்பவர்கள், பஞ்சம் பிழைக்க பரதேசம் போனவர்கள், கூத்துக் கலைஞர்கள் என நாம் வாழ்நாளில் ஒரு நொடி அதிகம் சிந்தித்திராத மனிதர்களே பாலாவின் கதாநாயகர்கள். இவர்களின் வாழ்க்கையில் இருக்கும் வலி, கோபம் , நகைச்சுவை , கொண்டாட்டம் அனைத்தையும் தனது படங்களின் மூலம் மக்களை ரசிக்க வைத்திருக்கிறார். நாம் எதை அழகற்றது என்று முகம் சுளித்து நகர்கிறோமோ அதில் ஒரு அழகைக் காணக்கூடியக் கண்கள் பாலவினுடையது.

உண்மையைத் தேடும் படைப்பாளி

ஒரு பணக்காரன் மன நிம்மதியை தேடி அலைகிறான். ஒரு எழை நிம்மதி மற்றும் பணத்தைத் தேடி செல்கிறான். ஒடுக்கப்பட்ட ஒருவர் நீதியைக் கேட்டு நிற்கிறார். சமூக கட்டமைப்பில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விடுதலை உணர்வு தேவைப்படுகிறது. வன்மங்கள் நிறைந்த தனது கதைகளில் இருந்து அன்பென்கிற ஒன்றை முன்வைத்துக் கொண்டே இருக்கிறார் பாலா. உண்மை என்கிற ஒன்று ஒவ்வொரு மனிதனைப் பொருத்து மாறுபடும் போது  இதில் ஒன்று சரி ஒன்று தவறு என்று நம்மால் எப்படி முடிவு செய்ய முடியும்.   இந்த எந்த சமூக கட்டமைப்பிற்குள்ளும் வராத மக்களின் வாழ்க்கையில் என்றும் தீராத போராட்டம் ஒன்று இருந்து வருகிறது. இவர்களின் கதைகளை பேசும் பாலா அவர்களின் வாழ்க்கையில் இருந்து அந்த உண்மையைக் கண்டுபிடிக்க முயல்கிறார். அது சில நேரங்களில் எதார்த்ததில் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம் ஆனால் அந்த வாழ்க்கையின் நியாயங்கள் கொடூரமானவைதான் என்பதை பாலாவின் படங்கள் காட்டின.

உதாராணத்திற்கு நான் கடவுள் படத்தில் மாற்றுத்திறனாளியான ஹம்சவள்ளிக்கு அவளது மரணமே அவளுக்கு மோட்சம் அளிக்கக் கூடிய ஒன்று. ஒரு ஒட்டுமொத்த வம்சமே அடிமகளாகிப்போனதன் துயரம் தான் பரதேசி படத்தின் இறுதிக்காட்சி.

தன்னுடைய துன்பகங்களை பிறருக்கு கடத்துவதும் பிறருடையத் துன்பங்களை தனதாக உணர்ந்து அதில் இருக்கும் ஏதோ ஒரு உண்மையை வெளிக்கொண்டு வந்து பொதுவில் வைப்பது மட்டும .பாலாவின் சமீபத்திய படங்கள் பெரியளவில் கவனம் பெறுவதில்லை. ஆனால் தொடர்ச்சியாக விவாதத்திற்கு உட்படுத்தக் கூடிய இயக்குநர்கள் பாலா இருந்து கொண்டே இருப்பார். 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget