Zee Tamil Serial: முடிவுக்கு வரும் மெளனம் பேசியதே, மாரி சீரியல்கள்... ஜீ தமிழில் விரைவில் புது சீரியல்கள்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெளனம் பேசியதே, மாரி உள்ளிட்ட 3 சீரியல்கள் முடிவுக்கு வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். வித்தியாசமான நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், அந்த தொலைக்காட்சியின் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகப்பட உள்ளது.
புதிய சீரியல்கள்:
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரிஜாதம் புதியதாக தொடங்கப்பட்ட நிலையில், இன்னும் சில நாட்களில் திருமாங்கல்யம் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
மேலும், அண்ணாமலை குடும்பம் என்ற பெயரில் புதிய சீரியல் ஒன்றும் உருவாகி வருகிறது.
இதன் காரணமாக மதியம், மாலை மற்றும் இரவு என மூன்று வேளையிலும் தலா ஒவ்வொரு சீரியல் என மொத்தம் 3 சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முடிவுக்கு வரும் 3 சீரியல்கள்:
ஆமாம், மதியத்தில் பௌசி, அசோக் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் மௌனம் பேசியதே சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல் மாலை 6 மணிக்கு சுகேஷ், அஞ்சனா ஸ்ரீநிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரி சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாரி சீரியலை தொடர்ந்து இரவு 10:30 மணிக்கு ஆனந்த் செல்வன், ஸ்வாதி நடிப்பில் அமானுஷ்யங்கள் நிறைந்த சீரியலாக ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடரும் முடிவுக்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது.
விரைவில் புதிய சீரியல்கள்:
இந்த மூன்று சீரியலுக்கும் மாற்றாக அடுத்தடுத்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட இந்த சீரியல்கள் முடிவுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், புதியதாக வர உள்ள சீரியல்கள் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















