Parijatham: வர்ஷினியை கல்யாணம் செய்வானா ராகவன்? கணவனின் திருமணத்தை தடுப்பாளா ஸ்ரீஜா?
பாரிஜாதம் சீரியலில் ஸ்ரீஜாவுக்கு தெரியாமல் வர்ஷினியைத் திருமணம் செய்ய ராகவன் முயற்சிக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம்.
சிலையை கொடுத்தது யார்?
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராகவன், இசை ஆகியோர் சிலை கடத்தலில் ஈடுபட்டிருந்த ஒருவனை வெளியே கொண்டு வந்து, அவனை வைத்து சிலையை கொடுத்தது யார்? என வரைய வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ராகவன் எனக்கு ஒருத்தர் மேல சந்தேகமா இருக்கு நான் பாத்துட்டு சொல்றேன் என சொல்கிறான். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இசை மற்றும் ராகவன் வீட்டிற்கு வருகின்றனர்.
வர்ஷினியை திருமணம் செய்வானா ராகவன்?
ராகவன் இசையிடம் நாளைக்கு எனக்கு கல்யாணம் என்று சொல்ல, கல்யாணமா யாருடன்? என்று கேட்க, வர்ஷினியுடன் தான் என்று சொல்கிறான். இதை சிந்தாமணி கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். உடனே ஸ்ரீஜாவுக்கு தகவல் கொடுக்கிறாள்.
அடுத்த நாள் இருவரும் பேசிக் கொண்டது போலவே, ராகவன் பட்டு வேட்டி சட்டையில் இறங்கி வர வர்ஷினி பட்டுப் புடவையில் வருகிறாள். பிறகு வர்ஷினியிடம் எங்க போற? என்று கேட்க கோவிலுக்கு போவதாக சொல்ல இசை நானும் உன் கூட கோவிலுக்கு வருகின்றேன் கிளம்பி செல்கிறாள்.
சிந்தாமணி இவர்களை பின் தொடர்ந்து வர உண்மையாகவே ரெஜிஸ்டர் ஆபீஸ் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஸ்ரீஜாவுக்கு தகவல் சொல்ல ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















