![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Meenakshi Ponnunga: மீனாட்சியை அவமானப்படுத்திய பூஜா... கடுப்பான சக்தி.. இன்றைய எபிசோடில் நடக்கப்போவது இதுதான்..!
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க
![Meenakshi Ponnunga: மீனாட்சியை அவமானப்படுத்திய பூஜா... கடுப்பான சக்தி.. இன்றைய எபிசோடில் நடக்கப்போவது இதுதான்..! zee tamil meenakshi ponnunga serial today episode 151 highlights Meenakshi Ponnunga: மீனாட்சியை அவமானப்படுத்திய பூஜா... கடுப்பான சக்தி.. இன்றைய எபிசோடில் நடக்கப்போவது இதுதான்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/02/6d605962b355afe268053274efa3244b1675335333088572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் பூஜா எல்லோர் முன்னிலையிலும் மீனாட்சியை அவமானப்படுத்தும் காட்சிகள் இடம் பெறுகிறது.
நேற்றைய எபிசோடில் பொன் உருக்கு விழாவில் வெற்றி கலந்து கொண்டு அனைத்து சடங்குகளையும் செய்வதை பார்த்து சக்தி ஃபீலாகிறாள். தொடர்ந்து வெற்றிக்கு முகூர்த்த நேரம் தள்ளி அவசரத்தில் கல்யாணம் செய்து விட்டதால் பரிகார பூஜை செய்ய தயாராக அந்த நிகழ்ச்சிக்கு மீனாட்சி, யமுனா, துர்கா வருகின்றனர். அப்போது மீனாட்சி சக்திக்கு வீட்டில் இருந்து கொண்டுவந்த வளையளை கொடுக்க சக்தி அதை வேண்டாம் என்று மறுக்கிறார்.
இதனையடுத்து சரண்யா ரங்கநாயகியிடம் சொல்லி அவரது புடவையை சடங்கிற்காக சக்திக்கு வாங்கி தருகிறாள். ஆனால் அந்த புடவையை பூஜா மாற்றி வைத்து யமுனாவை அவமானப்படுத்துகிறார். மேலும் சக்திக்கும் வெற்றிக்கும் பரிகார பூஜை நடப்பதைப் பார்த்து பூஜா வெறுப்படைகிறாள். பின் பூஜா தன்னுடைய நகையை காணவில்லை என சொல்லி, அதை மீனாட்சி தான் எடுத்திக்க வேண்டும் என குற்றம் சாட்டும் காட்சிகள் இடம் பெற்றது.
View this post on Instagram
இன்றைய எபிசோடில், நகை காணாமல் போனதால், எல்லோர் முன்னிலையிலும் மீனாட்சியை சோதிக்கின்றனர். பர்சில் ஏற்கனவே அவள் கொண்டு வந்த வளையலை தன்னுடைய வளையல் தான் என்று பூஜா சொல்லி விடுகிறாள்.உண்மையை நிரூபிக்க முடியாத மீனாட்சி எல்லோர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டு அவமானப்பட்டு வெளியேறுகிறார்.
ஆனால் சக்தி உண்மையை வெளியே கொண்டு வர பூஜாவை வளையலை போட்டு காட்ட சொல்கிறாள். வளையல் பூஜாவின் கையில் போகவில்லை, இதனால் சிக்கி கொண்ட பூஜா மன உளைச்சலில் இப்படி செய்துவிட்டதாக ரங்கநாயகியிடம் சொல்லி சமாளிக்கிறாள்.
மீனாட்சியை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதால் சக்தி மனவருத்தத்துடன் சாப்பிடாமல் இருக்கிறாள். இதனை சரண்யா மூலம் அறிந்த வெற்றி சக்தியை சமாதானப்படுத்தி, மீனாட்சியின் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். மீனாட்சியிடம் நடந்த சம்பவத்திறக்கு வருத்தம் தெரிவிக்கிறான். பிறகு மீனாட்சி சக்தியோடு சந்தோஷமாய் இருக்குமாறு வெற்றியிடம் சொல்லி அனுப்புகிறார்.
இதனையடுத்து ஜீப்பில் சக்தியுடன் செல்லும் வெற்றி பூக்காரியிடம் ஒரு கூடை நிறைய மல்லிகை பூ வாங்குகிறான். பூக்காரி சந்தோஷப்பட்டு இருவரையும் ஆசீர்வாதம் செய்கிறாள். இதை பார்த்து சக்தி கோபப்படுகிறாள். இருந்தாலும் பூக்கூடையுடன் வெற்றி வீட்டிற்கு வர பூஜா இதை பார்த்து எதற்கு இவ்வளவு பூக்கள் என விசாரிக்கிறாள். உடனே வெற்றி சக்தி பற்றி ரொமான்ஸாக பேச பூஜா கோவமடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)