![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Meenakshi Ponnunga: கோபத்தில் சங்கிலி.. வசமாக சிக்கிய பூஜா.. மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட் இதோ!
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சங்கிலியிடம் சக்திக்கு உன்னை பிடிக்காது என திடியன் சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
![Meenakshi Ponnunga: கோபத்தில் சங்கிலி.. வசமாக சிக்கிய பூஜா.. மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட் இதோ! zee tamil meenakshi ponnunga serial today episode 123 highlights Meenakshi Ponnunga: கோபத்தில் சங்கிலி.. வசமாக சிக்கிய பூஜா.. மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/04/964daf32a5edda74d4dbfa433f77b6c71672827163945572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சங்கிலியிடம் சக்திக்கு உன்னை பிடிக்காது என திடியன் சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
இதுவரை நடந்தது என்ன?
நேற்றைய எபிசோடில் வெற்றியின் அங்கவஸ்த்திரம் எரிக்கப்படுவதால் ஐயர் சொல்லி, பரிகாரம் செய்ய அவர் கோயிலுக்கு செல்கிறான். அப்போது பூஜா ஒரு அடியாளை அனுப்பி, வெற்றியை பாலோ செய்து சொல்கிறாள். இதற்கிடையில் சக்தி இருக்கும் அதே கோவிலுக்கு வெற்றி வர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கின்றனர். அந்நேரம் கோயிலில் ஒரு பாட்டி சங்கிலியை சந்தித்து வெற்றி.சக்தி இருவரும் தன் வீட்டில் தங்கியிருந்ததாக சொல்கிறார். இதை கேட்ட சங்கிலி கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.
View this post on Instagram
இன்றைய எபிசோடில் சங்கிலியிடம் சென்று வெற்றியும் சக்தியும் என் வீட்டில் ஒரு நாள் இரவு தங்கினார்கள் என பேசிய பாட்டிக்கு திடியன் பணம் கொடுக்கிறான். மறுபக்கம் சக்தி, சங்கிலி கல்யாணத்தை நினைத்து மீனாட்சி சாமி முன்பு கலக்கத்துடன் அமர்ந்திருக்கிறாள். இதனையடுத்து திடியன் பட்டுபுடவையை எரித்த விஷயத்தை சங்கிலியிடம் சொல்லி சக்திக்கு உன்னை பிடிக்காது என்று சொல்கிறான்.
நடப்பதையெல்லாம் பார்க்கும் கோகிலா கார்த்திக்கிடம் இந்த கல்யாணம் நடக்காது என்று புலம்ப யமுனா, சக்தி இருவரும் ஃபீல் பண்ணுகின்றனர். இதற்கிடையில் கோயிலில் இருந்து ஒரு அடியாள் பூஜாவுக்கு தகவல் சொல்வதை சரண்யா கேட்டு விடுகிறாள். உடனே திடியனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி அவனை பிடிக்க சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)