Karthigai Deepam: கார்த்திக்கை வீழ்த்த வெறி.. 50 கோடி கொடுத்து நிலத்தை வாங்கத் துடிக்கும் சிவனாண்டி!
Karthigai Deepam: கார்த்திக்கை வீழ்த்துவதற்காக ரூபாய் 50 கோடி வரை நிலம் கொடுத்து வாங்க சிவனாண்டி தயாராக உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அம்மாவின் நினைவிடம் திறக்க சேட்டு கடையில் அடகு வைத்த நிலத்தை மீட்க கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
உத்தரவாதம் அளித்த கார்த்திக்:
அதாவது கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் சேர்த்துவிட்டு சென்று விசாரிக்க, சேட்டு உயிருடன் இல்லை என அவரது மனைவி தெரிவிக்கிறார். மேலும் இப்போது தன்னுடைய மகன்தான் அனைத்து பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வதாக சொல்கிறார்.
அதோடு கார்த்திக் மயில் வாகனத்திடம் நினைவிடம் திறக்க பூமி பூஜை போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய சொல்கிறான். மேலும் அமைச்சரும் அத்தை சாமுண்டீஸ்வரியின் சேர்ந்து இந்த நினைவிடத்தை திறந்து வைப்பார்கள் என சொல்கிறான்.
நிலத்தை வாங்கத் துடிக்கும் சிவனாண்டி:
மறுபக்கம் சிவனாண்டி கார்த்திக் சேட்டுவை சந்திக்க சென்ற விஷயம் அறிந்து, அவரது மகனை சந்தித்து அந்த நிலத்தை யாருக்கும் கொடுத்துடாதீங்க.. நான் வாங்கிக்கிறேன் என்று சொல்ல சேட்டுவின் மகன் 50 கோடி ரூபாய் என்று சொல்ல, சிவனாண்டி எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க என்ன பண்றது ரெடி பண்ணிட்டு வரேன் என்று சொல்லிக் கிளம்புகிறான்.
இங்கே கார்த்திக் அண்ணன் ஆனந்துக்கு போன் செய்து நினைவிடம் கட்டவுள்ள நிலத்தை சுத்தம் செய்ய சொல்கிறான். அம்மாவோட நினைவிடத்தை நல்லபடியாக திறந்து சந்திரகலாவை வைத்துப் பெருக்கி சுத்தம் செய்ய வைக்கிறேன் என சபதம் எடுக்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்






















