Karthigai Deepam: சமாதியை திறக்க சம்மதிப்பாளா சாமுண்டீஸ்வரி? சந்திரகலாவை தோற்கடிப்பானா கார்த்திக்?
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சந்திரகலா சாமுண்டீஸ்வரியை கார்த்திக்கு எதிராக கொம்பு சீவி விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம்:
அதாவது கார்த்திக் ரேவதியை ஒரு ஜோசியரை சந்திக்க அழைத்து வர, ரேவதி இங்க எதுக்கு வந்திருக்கும்? என கேள்வி கேட்கிறாள். அம்மாவுக்காக நினைவிடம் திறக்க போறேன் அதுக்காக நாள் குறிக்கலாம் என வந்திருப்பதாக சொல்ல பிறகு இருவரும் ஜோசியரை சந்திக்கின்றனர். அவரும் ஒரு நல்ல தேதியை குறித்து கொடுக்கிறார்.
பிறகு ரேவதி நல்ல விஷயம் எனக்குத் தெரிந்த மத்திய அமைச்சர் இருக்காங்க அவங்கள வச்சு இந்த நினைவிடத்தை திறக்கலாம் என்று சொல்ல, கார்த்திக் இத சாமுண்டீஸ்வரி அத்தை அவங்க கையால திறந்து வச்சா நல்லா இருக்கும் என ஆசைப்படுகிறான். அதற்கான வேலைகளை நான் கவனிக்கிறேன் எனவும் கார்த்திக் சொல்கிறான்.
கார்த்திக்கிற்கு சவால் விட்ட சந்திரகலா:
பிறகு வீட்டுக்கு வந்து விஷயத்தை வைத்து சொல்ல சாமுண்டீஸ்வரி என்னால எல்லாம் இதை செய்ய முடியாது என கோபப்படுகிறாள். இதை பார்த்து ரசித்த சந்திரகலா கார்த்தியிடம் உன்னால இந்த விஷயத்துல எதுவும் பண்ண முடியாது என சவால் விடுகிறாள்.
கார்த்திக் அத்தை கையால எங்க அம்மா நினைவிடத்தை திறக்க வச்சிட்டா என்ன பண்ணுவீங்க? என்று கேட்க சந்திரகலா அப்படி மட்டும் நடந்தால், நானே அந்த நினைவிடத்தை தினமும் பெருக்கி வாரி சுத்தம் செய்து வழக்கு போடுகிறேன் என சவால் விடுகிறாள். ஒரு வேளை நான் தோத்து போயிட்டா இந்த வீட்டை விட்டு வெளியே போறேன் என கார்த்திக் சவால் விடுகிறான்.
ஒட்டுக்கேட்கும் சந்திரகலா:
இதைத் தொடர்ந்து கார்த்திக் நினைவிடம் திறப்பதற்கான வேலைகள் குறித்து மயில் வாகனத்துடன் பேசிக்கொண்டிருக்க இதை எல்லாம் ஒட்டு கேட்ட சந்திரகலா இதற்கு எதிராக ஏதாவது செய்யணும் என திட்டமிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























