Karthigai Deepam: நகையை காப்பாற்றிய கார்த்திக்.. அம்மாவை காப்பாற்றுவாரா? கார்த்திகை தீபத்தில் பரபரப்பு
கார்த்திகை தீபம் சீரியலில் கோயில் நகையை காப்பாற்றிய கார்த்திக், தனது அம்மாவை எப்படி காப்பாற்றுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
காணாமல் போன நகை:
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் விருமன் ஏற்பாடு செய்த ஆட்கள் பரமேஸ்வரி பாட்டி வீட்டில் இருந்து கோவில் நகையை திருடிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, பரமேஸ்வரி பாட்டி எப்படியாவது கோவில் நகையை கண்டுபிடிக்கணும் இல்ல நான் உங்க தாத்தாவோட கௌரவம் போயிடும் என்று வருத்தப்பட்டு பேசுகிறார். இந்த சமயத்தில் கார்த்திக் கீழே புலிப்பல் ஒன்று இருப்பதை கவனிக்கிறான்.
கண்டுபிடித்த கார்த்திக்:
இதை சமையல்காரன் ஒருவன் போட்டுக் கொண்டிருப்பதை நினைவு கூறும் கார்த்தி அதை வைத்து தேடுதலை தொடங்குகிறான். ஒரு கட்டத்தில் அந்த சமையல்காரனை பிடித்து அடித்து விசாரிக்கையில் இதெல்லாம் விருமன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துவேலின் திட்டம் என்பது தெரிய வருகிறது.
இதையடுத்து கார்த்திக் விருமன் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்த இங்கு நகைகள் எதுவும் இல்லை என தெரிய வருகிறது. கடைசியாக வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு இடத்தில் நகைகள் புதைக்கப்பட்டிருப்பது அறிந்து கார்த்திக் அதை மீட்டெடுக்கிறான்.
விருமன், இன்ஸ்பெக்டர் முத்துவேலின் சதித்திட்டத்தை முறியடித்த கார்த்திக், தனது அம்மாவை கடத்த நடத்தப்படும் சதியை எப்படி முறியடிக்கப்போகிறார்? என்பதே இன்றைய எபிசோடில் காணலாம்.





















