Karthigai Deepam: கல்யாண நாளில் உயிருக்கு ஆபத்து.. மனைவியை காப்பாற்றுவானா கார்த்திக்?
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதியால் ஜெயிலுக்கு சென்ற நபர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கோபப்படும் கார்த்திக்:
அதாவது கார்த்திக் அந்த நபரை பார்க்க வேண்டும் என ஸ்டேஷனுக்கு வர, அவரை இப்போது தான் பெயிலில் வெளியே எடுத்து கூட்டி சென்றதாக சொல்ல இப்படிப்பட்ட ஆட்களை எல்லாம் எப்படி வெளியே விடுறீங்க என கார்த்திக் கோபப்படுகிறான்.
அதைத்தொடர்ந்து கார்த்திக் மற்றும் ரேவதி கோவிலுக்கு வருகிறார்கள். கோவிலில் ஒரு புகழ் பெற்ற சித்தர் பலன் சொல்லிக் கொண்டிருக்க அவர் குறிப்பிட்ட சிலருக்கு தான் பலன் சொல்லுவார் என பேசிக் கொள்கின்றனர்.
ரேவதிக்கு கண்டம்:
ரேவதி மற்றும் கார்த்திக் அந்த வழியாக செல்ல சித்தர் ரேவதியை அழைத்து உங்க கல்யாண வாழ்க்கையில் பிரச்சனை இருக்கு கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும் இந்த கோவிலை சுத்திட்டு வா என்று அனுப்பி வைக்கிறார்.
பிறகு கார்த்தி பெயரை சொல்லி கூப்பிட்டு உன் பொண்டாட்டிக்கு கண்டம் இருக்கு. அது உங்களுடைய கல்யாண நாள் அன்னைக்கு பெரிய கண்டம் இருக்கு, அன்னைக்கு ஒரு நாள் அவள தனியா விடாத. அந்த ஒரு நாள தாண்டிட்டா உங்க வாழ்க்கையில எந்த பிரச்சனையும் இருக்காது என்று சொல்ல கார்த்திக் அதிர்ச்சியும் குழப்பமும் அடைகிறான். ஆனால் சித்தர் சொன்ன விஷயத்தை ரேவதியிடம் சொல்லாமல் மறைக்கிறான்.
இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த கார்த்திக் மயில்வாகனத்திடம் சித்தர் சொன்ன விஷயத்தை சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























