ஏத்திவிடும் சின்ன மாமியார்.. எதிர்த்து பேசும் மருமகன் - கார்த்திகை தீபத்தில் கலகலப்பும், விறுவிறுப்பும்!
Karthigai Deepam: ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரோஸ் கொடுத்து கொண்டாட்டம்:
அதாவது மயில்வாகனம் ரோகிணிக்கு ரோஸ் கொண்டு வந்து கொடுத்து காதலை சொல்ல, சாமுண்டீஸ்வரி "என்ன மாப்ள எப்பவும் இல்லாம புதுசா?" என கேள்வி கேட்க, "கார்த்திக் சகல தான் இன்னிக்கு காதலர் தினம்" என ஐடியா கொடுத்ததாக சொல்கிறான். ரோகினி மயில்வாகனம் கொடுத்த பூவை வாங்கிக் கொண்டு சந்தோஷப்படுகிறாள்.
அதன் பிறகு ராஜராஜன் சாமுண்டீஸ்வரிக்கு ரோஸ் கொடுக்க, "உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்த்தையே இல்ல" என திட்டி விட்டு கிளம்பி செல்ல, சந்திரகலா கார்த்திக் ரேவதியை வெளியே அழைத்துச் சென்று இருக்கும் விஷயத்தை சொல்லி ஏற்றி விடுகிறாள். பிறகு கார்த்திக், ரேவதி வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி கோபப்பட, கார்த்திக் "நான் என் பொண்டாட்டிய வெளிய கூட்டிட்டு போய்ட்டு வந்தேன்" என பதிலடி கொடுக்கிறான்.
தண்டச்சோறு என்ற சந்திரகலா:
பிறகு ரூமுக்கு வந்த ரேவதி ஹோட்டலில் நடந்த விஷயங்களை நினைத்து சந்தோஷப்படுகிறாள். மயில்வாகனம் சந்திரகலாவை சந்தித்து, "என்ன சின்ன மாமியாரே நினைவிடத்த பெருக்க போலாமா?" என்று கலாய்க்கிறான். அதன் பிறகு எல்லோரும் சாப்பிட உட்கார சந்திரகலா மயில்வாகனத்தை வம்பு இழுத்து , தண்டசோறு என திட்டி காயப்படுத்துகிறாள்.
இதனால் மயில் வாகனம் மனம் உடைந்து சாப்பிடாமல் எழுந்து செல்ல, சாமுண்டீஸ்வரி சந்திரகலாவை திட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























