Karthigai Deepam: கார்த்திக்தான் என் புருஷன்! மாயாவிடம் அடித்துச் சொன்ன ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாயா ரேவதிக்கு போன் செய்து உன்னை சந்திக்க வேண்டும் என்று சொல்லிய நிலையில் என்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமுண்டீஸ்வரியிடம் சிக்கிய ரேவதி:
அதாவது, ரேவதி இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மாயாவை சந்திக்க கிளம்ப சாமுண்டீஸ்வரி இதை பார்த்து இந்த நேரத்துல எங்க போறா? என ரேவதியை பின் தொடர்ந்து செல்கிறாள்.
ரேவதி மாயா வீட்டுக்கு வந்து அவளை சந்திக்க மகேஷ் எங்க போனான் என்று தெரியல, அவன் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்படி ஆச்சு அவனை தேடி கண்டுபிடித்து கொடு என்று சொல்ல ரேவதி ஹனிமூனுக்கு போகும் போது கார்த்தியிடம் பேசி உண்மையை கண்டு பிடிக்கிறேன் என்று சொல்கிறாள்.
கார்த்திக்தான் என் புருஷன்:
பிறகு மாயா மகேஷ் திரும்ப வந்தால் அவனை ஏத்துக்குவியா என்று கேட்க, ரேவதி கார்த்தியை பிடிக்காட்டினாலும் அவ என் கழுத்துல தாலி கட்டிட்டான். அவன் தான் என்னுடைய புருஷன். ஒரு பொண்ணோட கழுத்துல ஒரு முறை தான் தாலி ஏறணும் என்று சொல்லி விடுகிறாள்.
ரேவதி பேசுவதை கேட்ட சாமுண்டீஸ்வரி ஓரளவிற்கு மன நிம்மதி அடைகிறாள். அடுத்த நாள் காலையில் கார்த்திக் ரேவதி ஆகியோர் ஹரியும் கிளம்ப தயாராகின்றனர். ரேவதி டல்லாகவே இருக்க ராஜராஜன் கார்த்தியிடம் பணக்கட்டை எடுத்து செலவுக்கு வச்சுக்கோங்க மாப்ள என்று கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ஏற்காட்டுக்கு வந்து இறங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.