கணவரை பற்றி பேசியது ஒரு குத்தமா? ஃபேக் ஐடியில் வந்து திட்டிய நெட்டிசன்களுக்கு நடிகையின் தரமான பதிலடி!
சினிமாவில் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது காலங்காலமாக நடந்து வருகிறது. அதே போன்று தான் சின்னத்திரையிலும் நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொள்வதும் நடந்து வருகிறது.

ஒரே சீரியலில் நடிப்பவர்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள், வெவ்வேறு சீரியல்களில் நடிப்பவர்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி தான் இந்த ஜோடியும் திருமணம் செய்து கொண்டது. பொன்னி சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவியும், சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் வெற்றி வசந்தும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு முன்னதாக வைஷ்ணவிக்கு அண்ணன் ரோலில், வெற்றி வசந்த் கேமியோ ரோலில் நடித்தார். அதன் பிறகு நட்பாக பழகி வந்த நிலையில் காதலர்களாக மாறினர். இவர்களது காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்கவே பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்த நிலையில் தான் தனது கணவர் குறித்து வைஷ்ணவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதற்கு நெட்டிசன்கள் பலரும் ஆபாசமாக கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இதற்கு வைஷ்ணவி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வைஷ்ணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டபோது.... தனது மனைவிக்காக வெற்றி வசந்த் கசாயம் எல்லாம் போட்டு கொடுத்து அவரை அக்கறையோடு பார்த்து கொண்டாராம். இந்த தகவலை வைஷ்ணவி மிகவும் மகிழ்ச்சியாக "இன்ஸ்டா ஸ்டோரியில் தனது அம்மாவை போன்று என் கணவர் என்னை பார்த்துக் கொள்கிறார் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதை பொறுக்காத சிலர்... ஆபாசமாகவும், இவர்கள் இருவரையும் உருவ கேலி செய்து வசைபாடியுள்ளனர்.
இதை பார்த்து டென்சன் ஆன வைஷ்ணவி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். வாழ்த்துவதற்கு மனதில்லை என்றாலும் கூட ஏன் இப்படி அடுத்தவர்களை பற்றி பேசுகிறார்கள். அதிலேயும் யாரும் தங்களது உண்மையான ஐடியை கொடுப்பதில்லை. பேக் ஐடியில் தான் அடுத்தவர்களை பற்றி விமர்சிக்கிறார்கள். என வெளுத்து வாங்கி உள்ளார். இவரின் இந்த பதிலடிக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

