மேலும் அறிய

Ethirneechal: தர்ஷினியிடம் எல்லைமீறும் ரவுடி! ஆபத்தில் சிக்கிய ஜனனி! காப்பாற்ற வந்தது யார்?

Ethirneechal : தர்ஷினியிடம் தவறாக நடந்து கொள்ள ரவுடி முயற்சிப்பதும், ஜனனி மற்றும் ஈஸ்வரி ஆபத்தில் சிக்கியிருக்கும் வேளையில் அவர்களை காப்பாற்ற வந்திருக்கும் நபர் யார்? என்று எதிர்நீச்சலில் இன்று ஒளிபரப்பப்பட உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினியை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்றதால் அவளை அங்கும் இங்கும் விசாரித்து தேடி வருகிறாள் ஈஸ்வரி. அவளுக்கு துணையாக சக்தி, ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினி இருக்கிறார்கள். தர்ஷினியை பற்றி விசாரிக்கும் சமயத்தில் தான் திடீரென சக்திக்கு விபத்து ஏற்பட, அவருக்கு இடுப்பு எலும்பில் கிராக் ஏற்பட்டு விட்டது. அதனால் அவன் ஒரு வாரத்திற்கு பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் என டாக்டர் சொல்லி விடுகிறார். 

குணசேகரன் சந்தேகம் முழுவதும் ஜீவானந்தம் மீது தான் இருக்கிறது. ஈஸ்வரி தான் தர்ஷினியை ஜீவானந்தத்திடம் அழைத்து சென்று மறைத்து வைத்திருக்கிறாள் என்பது அவரின் யூகம். தர்ஷினியை தேடும் பொறுப்பை ராமசாமியிடமும், கிருஷ்ணசாமியிடமும் கொடுத்துள்ளார் குணசேகரன்.    

 

Ethirneechal: தர்ஷினியிடம் எல்லைமீறும் ரவுடி! ஆபத்தில் சிக்கிய ஜனனி! காப்பாற்ற வந்தது யார்?

சக்தியை பார்த்து கொள்ள ஆதிரை வந்ததால் ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி நால்வர் மட்டும் தர்ஷினியை தேடி செல்கிறார்கள். மறுபக்கம் தர்ஷினியை ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு மாற்றுகிறார்கள். அப்போது தர்ஷினி கடத்தல்காரர்களிடம் தனக்கு வயிறு வலிப்பதாகவும் அதனால் மாத்திரை பெயரை எழுதி தருகிறேன் வாங்கி தாருங்கள் என சொல்லி அவளை கடத்தி வந்து அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஆங்கிலத்தில் எழுதி கொடுக்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 

அதன் தொடர்ச்சியாக இன்றைய ( பிப்ரவரி 1 ) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

தர்ஷினியை கடத்தி வைத்து இருப்பவர்களில் ஒருவன் அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறான். அதனால் பயத்தில் தர்ஷினி கத்தி கூச்சல் போட அதை கேட்ட மற்ற ரவுடிகள் வேகவேகமாக மாடிக்கு ஓடி வருகிறார்கள். 

 

Ethirneechal: தர்ஷினியிடம் எல்லைமீறும் ரவுடி! ஆபத்தில் சிக்கிய ஜனனி! காப்பாற்ற வந்தது யார்?

ஜனனி, ஈஸ்வரி மற்ற இருவரும் ஒரு இடத்தில் யாரோ ஒருவருக்காக காத்திருக்கிறார்கள். அப்போது சில ரவுடிகள் வந்து அநாவசியமாக பேசி ஜனனியிடம் மற்றவர்களிடம் வம்பு செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள் பெண்கள். அப்போது யாரோ ஒருவர் காரில் இருந்து வந்து இறங்குகிறார். அவர் முகத்தை ப்ரோமோவில் காட்டவில்லை. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ. 

அநேகமாக காரில் வந்து இறங்கியது ஜீவானந்தமாக தான் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. மீண்டும் ஜீவானந்தம் என்ட்ரி கொடுத்தால் சீரியலில் பரபரப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Ethirneechal: தர்ஷினியிடம் எல்லைமீறும் ரவுடி! ஆபத்தில் சிக்கிய ஜனனி! காப்பாற்ற வந்தது யார்?

குணசேகரன் கடத்தி வைத்திருக்கிறாரா? அல்லது இது ஏதாவது புது வில்லனின் வேலையா? என்பது வரும் எபிசோட்களில் தெரிய வரும். இருப்பினும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
Embed widget