Ethir Neechal Sep 02: அட்ராசக்க.. சரியான நோஸ் கட் கொடுத்த ஈஸ்வரி.. அவமானத்தில் தலை குனிந்த குணசேகரன்.. எதிர் நீச்சலில் இன்று!
Ethir neechal September 02 :* குணசேகரனை எதிர்த்துப் பேசி மூக்கை உடைத்த ஈஸ்வரி* மரியாதை இல்லாமல் பேசிய கதிருக்கு சரியான பதிலடி இன்றைய எதிர் நீச்சல் எபிசோட்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினியின் அப்பா வந்து அவளுடைய அம்மாவின் உடல்நிலை சரியில்லை என்பதால் செலவுக்காக சில சொத்துக்களை விற்க போவதாகவும் அதை பற்றி தகவல் சொல்லிவிட்டு செல்வதற்காக வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குணசேகரனும் கதிரும் வழக்கம் போல நக்கலாக பேச, கொந்தளித்த நந்தினி அவர்களின் முகத்திரையை கிழிக்க, கதிர் நந்தினியை அடிக்க எகிறிக் கொண்டு செல்கிறான். அவனை அனைவரும் சமாதானம் செய்கிறார்கள். அந்த சமயத்தில் ஈஸ்வரியின் அப்பா வந்து தேவையில்லாமல் ஜீவானந்தத்தை பற்றியும், இளம் வயதில் ஈஸ்வரியை பொண்ணு கேட்டு வந்தது பற்றியும் அனைவருக்கும் முன்னிலையில் சொல்லி பெரிய பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டார்.

இதைக் கேட்ட குணசேகரன் இடிந்து போனது போல ஆகிவிடுகிறார். ரேணுகா ஈஸ்வரிக்கு போன் மூலம் வீட்டில் நடந்த அனைத்தையும் பற்றி சொல்லி அவளை தயராக வர சொல்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குணசேகரன் வீடு வாசலில் உட்கார்ந்து கொண்டு இருக்க ஈஸ்வரியும் ஜனனியும் வீட்டுக்கு வருகிறார்கள். ஈஸ்வரியை பார்த்து முறைத்து கொண்டே குணசேகரன் "அந்த ஜீவானந்தம் உன்கிட்ட சொல்லி அனுப்புனானா?" என்கிறார். அதற்கு கதிர் "சொல்லி இருப்பான்" என சொல்ல, டென்ஷனான ஈஸ்வரி "ஏய் கதிர்... மரியாதையா பேசு" என கையைக் காட்டி அடக்குகிறாள்.
அந்த நேரத்தில் தர்ஷனும் தர்ஷினியின் அங்கே வர அவர்களிடம் குணசேகரன் "இங்க நடக்குற கூத்தெல்லாம் பாத்துகிட்டு இருக்கீங்களா இல்ல" எனக் கேட்க ஈஸ்வரி குணசேகரனை தள்ளிவிட்டு "மனுஷனாயா நீ?" என்கிறாள். ஏய்! என மிரட்டுகிறார். "என்ன பேச்சு பேசிகிட்டு இருக்க குழந்தைங்க கிட்ட?" என்கிறாள். "உங்க அப்பா சரி சொல்லி இருந்தா?" எனக் கேட்க மிகவும் உறுதியாக "கல்யாணம் பண்ணி இருப்பேன்..." என்கிறாள்.
அதை கேட்டு தலை குனிந்து கொள்கிறார் குணசேகரன். அவள் சொன்ன அந்த பதிலை கேட்டு ஜனனி, சக்தி மற்றும் நந்தினி சந்தோஷப்படுகிறார்கள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
ஜீவானந்தத்துக்கு தனது மனைவியை கொன்றது குணசேகரன் அனுப்பிய ஆள் தான் என தெரிய வருமா? ஈஸ்வரி அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன? அவளுக்கு சப்போர்ட்டாக தர்ஷினியின் தர்ஷனும் நிற்பார்களா? ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் நிச்சயம் எதிர் நீச்சல் (Ethir neechal) சீரியலில் இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
ட்ரெண்டிங் செய்திகள்





















