மேலும் அறிய

Ethirneechal July 28 : கௌதமின் உதவியை நாடும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் புலம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் நேற்று

* ஊசி போட்டு என்னை கொன்னுடுங்க என புலம்பும் குணசேகரன் * கெளதம் மூலம் ஜீவானந்தத்தை சந்திக்க முயற்சி செய்யும் ஈஸ்வரி நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் தனது வலது கை கால் செயல் இழந்ததை நினைத்து மிகுந்த மன வருத்தத்தில் டாக்டரிடம் சொல்லி ஊசி போட்டு அவரை கருணை கொலை செய்யச் சொல்லி கேட்குமாறு தம்பிகளிடம் சொல்கிறார். அவர் இப்படி சொன்னதும் அதை தாங்காமல் அனைவரும் உடைந்து அழுகிறார்கள். மானம் மரியாதை போன பிறகு என்னால் வாழ முடியாது என சொல்லி கவலை படுகிறார். 

Ethirneechal July 28 : கௌதமின் உதவியை நாடும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் புலம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் நேற்று

என்னை எப்படி ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்தீர்கள் என கேட்கிறார். வீட்டில கார் எதுவும் இல்லாததால் சக்தி மாமாவோட பைக்ல தான் இங்க கூட்டிட்டு வந்தோம் என கரிகாலன் சொல்கிறான். ஏற்கனவே ஆதிரை கல்யாணம் சமயத்தில் வத்தலக்குண்டுவில் எல்லாரும் வீடியோ எடுத்தானுங்க. அடுத்து அந்த ஜீவானந்தம் என்னை ஆபிசுக்கு வெளியே தூக்கி கொண்டு வந்து எரியும்போது எடுத்தானுங்க. இப்போ இதையும்  வீடியோ எடுத்து இருப்பானுங்களே. இந்த குணசேகரன் மானத்தை நார் நாரா கிழிக்குறீங்களே. இனிமே எனக்கு எதுக்கு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை.  

அந்த ஜீவானந்தம் வீட்டுக்கும் வந்து விட்டானா என ஆடிட்டரிடம் கேட்கிறார். ஆடிட்டரும் இல்லை சார் நான் விசாரித்து விட்டேன் என்கிறார். அப்போ வீடு நமக்குத்தானா என மறுமுறை கேட்டு தெரிந்து கொள்கிறார். வீட்டில் இருக்கும் பொம்பளைங்க யாரையும் ஏன் காணவில்லை. அவர்கள் யாரும் வரமாட்டார்கள். எனக்கு வீட்டிலும் மரியாதை இல்லை வெளியிலும் மரியாதை போய்விட்டது இனிமேல் நான் வாழக்கூடாது என புலம்புகிறார். 

ஞானம் "வருத்தப்படாதீங்க அண்ணன், டாக்டர் இரண்டு வாரத்தில் சரி செய்து விடலாம் என சொல்லி இருக்கார். சொத்து எதுவும் உங்க கையை விட்டு போகாது நாங்க பாத்துக்குறோம்" என ஞானம் சொல்கிறான். உடனே கரிகாலன் "இவங்களால எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது, அக்கா எல்லாரும் ஆவேசமா புரட்சி செய்வதற்காக கிளம்பி  விட்டார்கள் நிச்சயமாக சொத்தோடு தான் திரும்பி வருவார்கள். எல்லா சொத்துக்களோடும் வெற்றிகரமாக வீட்டுக்கு போகலாம் இல்லைன்னா நீ மூச்சை புடிச்சுகிட்டு தற்கொலை பண்ணிக்க" என கரிகாலன் சொன்னதும் செம்மையா அடிவிழுது. குணசேகரனை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார்கள். 

Ethirneechal July 28 : கௌதமின் உதவியை நாடும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் புலம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் நேற்று

ஜீவானந்தத்தை சந்தித்து பேசுவதற்காக சென்ற ஈஸ்வரி, ஜனனி மற்றும் நந்தினி அவரை பார்க்காமல் முடியாமல் யோசித்து கொண்டு இருக்கிறார்கள். அவர் கம்பெனியில் இல்லை ஊரிலே இல்லை என சொல்கிறார்கள் என்கிறாள் ஜனனி. ஈஸ்வரி, கெளதம் மூலம் நான் ஜீவானந்தத்தை சந்திக்க முயற்சி செய்வது பற்றி தெரிவித்தால் என்ன என கேட்கிறாள். அதை கேட்ட ஜனனிக்கு மிகவும் கோபம் வருகிறது. ”அவன் ஒரு துரோகி அவன் முகத்தை கூட இனி நான் பார்க்க விரும்பவில்லை. அவன் என்னை ஏமாற்றிவிட்டான்” என்கிறாள்.

ஈஸ்வரி, ”அப்போ நான் பேசி பார்க்கிறேன். அவன் என்னை உரிமையாக அக்கா என்றான் அவனுடைய சேர்க்கை தப்பாக இருந்தாலும் அவனுடைய அன்பை கண்களில் பார்த்தேன்” என சொல்லி அவனுக்கு போன் செய்து அவர்கள் இருக்கும் லொகேஷனுக்கு வர சொல்கிறாள் ஈஸ்வரி. கௌதமும் அங்கே வர சம்மதிக்கிறான். 

குணசேகரன் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார் என்பதை தெரிந்து அங்கு வரும் உறவுக்காரர்கள் அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். ”எத்தனையோ பேருக்கு படிப்பு, கல்யாணம், வீடு வசதி எல்லாம் செய்து கொடுத்து இருக்க. உனக்கு எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும். உன்னோட சொத்தை பறித்தவன் கை கால்களை நாங்கள் உடைத்து விடுகிறோம்” என்கிறார்கள் உறவுக்காரர்கள்.

நர்ஸ் வந்து இங்க கூட்டம் சேர்ந்து சத்தம் போடாதீங்க என சொல்லி அனுப்பிவிடுகிறார். புலம்பி கொண்டே இருக்கும் குணசேகரன், ”எனக்கு ஜாதகம் பார்க்கணும் போல இருக்கு அதனால நீ போய் என்னோட ஜாதகத்தை கொடுத்து பார்த்துட்டு வா” என ஞானத்திடம் சொல்கிறார். அத்துடன் நேற்றைய  எபிசோட் முடிவுக்கு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
Embed widget