Roja Serial: ரோஜாவை சுத்திப் போடும் சாக்ஷி... அடித்து பறக்கவிட தயாராகும் ரோஜா... அலப்பறை அட்ராசிட்டி ஸ்டார்ட்!
வெள்ளை புடவையோடு ரோஜா நடந்து வர, மற்றொரு வெள்ளை புடவையோடு சாக்ஷி எதிர்புறம் வருகிறார்.
சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் மீண்டும் ரோஜாவிற்கு கண்டம் தொடங்கிவிட்டது. கொலை வழக்கில் கைதான ரோஜா நீதிமன்றத்தில் ஆஜராக, அவருக்கு ஆதரவாக அவரது கணவர் அர்ஜூன் மற்றும் தந்தை டைகர் மாணிக்கம் களமிறங்கியிருந்தனர். அரசு தரப்பில் பிரபல வழக்கறிஞர் ஜெயசீலன் களமிறங்கி நேற்றைய எபிசோட் சூடுபிடித்தது.
அரசு தரப்பு வழக்கறிஞரின் அதிரடி வாதத்தால்(அப்படி தான் அவங்க சொல்றாங்க) அனைத்தும் ரோஜாவிற்கு எதிராக திரும்புகிறது. அர்ஜூனும், டைகர் மாணிக்கவும் முன் வைத்த வாதங்கள் எடுபடவில்லை. அங்கே சுற்றி , இங்கே சுற்றி... ரோஜா சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. ரோஜாவிற்கு மரண தண்டனை வழங்கியே ஆக வேண்டும் என்கிறார் அரசு தரப்பு வழக்கறிஞர். என்னடா இது ரோஜாவுக்கு வந்த சோதனை என தாய்மாரெல்லாம் கண்ணீர் கலங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அர்ஜூன் ஒரு பயங்கர திட்டத்தை தீட்டுகிறார்.
டைகர் மாணிக்கத்திற்கு நெஞ்சுவலி வந்தது போன்றும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்பது தான் அர்ஜூனின் திட்டம். இதற்கு முன் யாருக்குமே(!) சிந்திக்காத, உதிக்காத ஐடியாவை அப்ளை செய்கிறார் அர்ஜூன். டைகர் மாணிக்கம் நெஞ்சை பிடித்து சீன் போட, வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அப்புறம் என்ன... வேகமாக அவரை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.
வழக்கம் போல, போலீஸ் அதிகாரி சந்திரகாந்தாவிடம் அர்ஜூன் பேசுகிறார். ‛மேடம்... நீதிமன்றத்தில் தப்பித்துவிட்டோம்... இப்போது மருத்துவமனை வந்துள்ளோம்... இங்கு கண்டுபிடித்து விடுவார்களே...’ என்கிறார் அர்ஜூன். ‛டோண்ட்வொரி அர்ஜூன்... நீங்க நெஞ்சுவலி பிளான் போட்டதுமே... நான் இந்த மருத்துவமனையை செலக்ட் பண்ணிட்டேன்; இந்த டாக்டர் நம்ம ஆளு தான்...’என டுவிட்ஸ்ட் கொடுக்கிறார்.
சீரியல் பார்க்கும் அனைவருக்கும் ஒரே ஷாக்... எப்படி இத்தனை ட்விஸ்ட் இந்த சீரியலில் மட்டும் நடக்கிறது. அதுவும் நாம் எதிர்பார்க்காத காட்சிகள் அனைத்தும்...! இதோடு கேமரா சிறைக்குச் செல்கிறது. வெள்ளை புடவையோடு ரோஜா நடந்து வர, மற்றொரு வெள்ளை புடவையோடு சாக்ஷி எதிர்புறம் வருகிறார். ஒருவருக்கொருவர் டெடர் பார்வை பார்த்துக் கொள்கின்றனர். ரோஜாவை அடிக்க பாய்கிறார் சாக்ஷி,
அவ்வளவு தான், அவரது கையை பிடித்து ரோஜா தடுத்து தாக்குகிறார். உடனே சிறையில் உள்ள சக பெண் கைதிகள், ‛ஏய்... நம்ம அக்காவை அடிக்கிறா... வாங்கடி...’ என ரோஜாவை சுத்திப் போடுறாங்க! அநேகமாக இன்னைக்கு வந்து எல்லோரையும் ரோஜா பறக்கவிடுவாங்கன்னு நெனைக்கிறேன். இதற்கு முன் அர்ஜூன் பல முறை இது போன்று பறக்கவிட்டுள்ளார். முதன்முறையாக ரோஜா, ஸ்டெண்ட் செய்வார் எனத் தெரிகிறது. அது தானே ட்விஸ்ட்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets