மேலும் அறிய

Praveen Gandhi: வெற்றிமாறனுக்கு முன்பே நான் வெற்றி கண்டவன், பா.ரஞ்சித் குழந்தை.. பிரவீன் காந்தி மீண்டும் பேச்சு!

வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித் ஆகியவர்கள் எல்லாம் தனக்கு குழந்தை மாதிரி என்று இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பிரவீன் காந்தி சர்ச்சை கருத்து

வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித் போன்றவர்களின் வளர்ச்சிக்குப் பின் தான்  தமிழ் சினிமா தளர்ச்சிக் கண்டது என்கிற கருத்தைச் சொல்லி சென்ற வாரம் பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் பிரவீன் காந்தி. இதனைத் தொடர்ந்து தற்போது நேர்காணல் ஒன்றில் மீண்டும் அதே போன்ற கருத்துக்களைப் பேசியுள்ளார் பிரவீன் காந்தி.

சாதியை வைத்து வியாபாரம்

தனியார் ஊடகத்தின் நேர்காணலில் பேசிய பிரவீன் காந்தி “தமிழ் சினிமா சாதியை மையப்படுத்தி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணத்தால் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சலிப்பு ஏற்பட்டுவிட்டது. கடந்த 5 மாதங்களாக தமிழ் சினிமாவில் நல்ல படம் எதுவுமே வரவில்லை. வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் படங்கள் தான் நல்ல படங்கள் என்று சொல்லாதீர்கள்.

மீடியா உட்பட எல்லாரும் இவர்களின் படங்கள் தான் நல்ல படங்கள் என்று ஆதரவு கொடுக்கிறீர்கள். இவர்கள் வந்த பிறகுதான் சினிமா மறுமலர்ச்சி அடைந்தது என்று சொல்லாதீர்கள். சினிமா பொழுதுபோக்காக இருந்தால் சினிமா பார்ப்பார்கள். Jurassic Park படம் எடுத்த ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் Schindlers List என்கிற படத்தை எடுத்தார். ஆனால் Jurassic Park தான் வெற்றிபெற்றது. அதனால் வெற்றிமாறன், பா. ரஞ்சித் வந்து தான் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டார்கள் என்று பேசாதீர்கள்” என்று பிரவீன் காந்தி கூறியுள்ளார்.

'வெற்றிமாறன் எல்லாம் எனக்கு குழந்தை'

தொடர்ந்து பேசிய அவர் “எனக்குத் தெரிந்து முதன்முதலில் சாதியை வைத்து வந்த படம் ‘வேதம் புதிது’. இயக்குநர் பாரதிராஜா ஒரு சில இடங்களை மட்டும் தொட்டுச் செல்வார். ஆனால் இவர்கள் யாரும் இன்னொரு சாதியினரை திட்டி படம் எடுக்கவில்லை. ரஞ்சித் எத்தனை மேடைகளில் என்னுடைய இனத்திற்காக நான் படம் எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். சாதியை ஒழிப்பதாக நினைத்து சாதிய வன்மத்தை நீங்கள் தூண்டி விடுகிறீர்கள்.

1980 மற்றும் 1990களில் சினிமாவில் எங்களுக்கு இடையில் எந்த விதமான பாகுபாடும் கிடையாது. வெற்றிமாறன் வந்தபிறகு தான் சினிமாவிற்குள் சாதி வந்தது. வெற்றிமாறன் சினிமாவில் வெற்றிக் கண்டதற்கு முன்பே நான் வெற்றியைக் கண்டவன். வெற்றிமாறன், ரஞ்சித் எல்லாம் எனக்கு குழந்தை மாதிரி. குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை திருத்துவது என்னுடைய கடமை. இன்று சமூதாயத்தில் மாற்றம் வந்துவிட்டது. நீங்கள் எங்களை கொடுமைப்படுத்தினார்கள் என்று பழைய கதைகளை எடுத்துவந்து மீண்டும் சாதிய வன்மத்தைத் தூண்டாதீர்கள்” என்று பிரவீன் காந்தி பேசியுள்ளார். பிரவீன் காந்தியின் கருத்து வெற்றிமாறன் ரசிகர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget