![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கடலுக்குள் மூழ்கிய நாய்.. தண்ணீருக்குள் குதித்து காப்பாற்றிய பிரபல நடிகரின் மகன் - வைரல் வீடியோ
என்னதான் பிரபல நடிகரின் வாரிசாக இருந்தாலும், எப்போதுமே சிம்பிளாகவே இருக்க விரும்புவார் என்கிறது மலையாள மீடியாக்கள்.
![கடலுக்குள் மூழ்கிய நாய்.. தண்ணீருக்குள் குதித்து காப்பாற்றிய பிரபல நடிகரின் மகன் - வைரல் வீடியோ Pranav Mohanlal rescues stray dog from sea, social media showers praise on actor கடலுக்குள் மூழ்கிய நாய்.. தண்ணீருக்குள் குதித்து காப்பாற்றிய பிரபல நடிகரின் மகன் - வைரல் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/26/34cbbe968cc585c318a8604eb7601336_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மலையாள சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக இருப்பவர் நடிகர் மோகன்லால். ரசிகர்களால் லாலேட்டன் என அன்போடு அழைக்கப்படும் இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் பிரணவ் மோகன்லால் சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். என்னதான் பிரபல நடிகரின் வாரிசாக இருந்தாலும், எப்போதுமே சிம்பிளாகவே இருக்க விரும்புவார் என்கிறது மலையாள மீடியாக்கள். மற்ற முன்னணி நடிகர்களின் மகன்களை அடிக்கடி பார்த்து பழகிய பலருக்கும் மோகன்லாலின் மகன் பிரணவை அப்படியாக பார்த்திருக்க வாய்ப்பில்லையாம். வழக்கமான ஊர்குருவியாக இல்லாமல் நண்பர்கள், கேம்ப், நடைப்பயணம் , சமூக சேவை என மிகவும் எளிமையான வாழ்க்கையையே பிரணவ் தேர்ந்தெடுத்திருக்கிறார். சமீபத்தில் சோலோவாக இவர் மணலி பயணம் மேற்க்கொண்ட போது , கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள் , பிரணவ் மோகன்லாலை வழிமறைத்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்திருந்தனர். “அதில் உங்கள் பேர் என்ன ? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே! “ என அவர்கள் கேலியாக கேட்க, எதையும் பகட்டாக்கிக்கொள்ளாமல் இயல்பாக புன்னகைத்து, அந்த வீடியோவில் முகம் காட்டி கடந்து செல்கிறார் பிரணவ் .
When parenting teaches you to be simple and humble 💯#PranavMohanlal ❣️✨#Hridayam @Mohanlal @impranavlal pic.twitter.com/8P6FuehgX8
— GPMFWO THRISSUR DISTRICT™ (@GpmfwoTCR) September 17, 2021
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு நபர் கடலில் நீந்தியபடி வருகிறார். அது பிரணவ் மோகன்லால்தான் . இரண்டு நிமிட வீடியோவின் இறுதி நிமிடங்களில் பிரணவ் கையில் நாய் வைத்திருப்பது நமக்கு புலப்படுகிறது. அந்த நாயை சக நாய்களுடன் சேர்த்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விடுகிறார் பிரணவ்மோகன்லால். கடல் அலையால் அடித்துச்செல்லப்பட்ட நாய் ஒன்று , உயிருக்கு போராடியபடி தத்தளித்துள்ளது. அதனை கண்ட பிரணவ்மோகன்லால் நீச்சல் அடித்து சென்று அந்த நாயை காப்பாற்றியுள்ளார். இந்த நெகிழ்சியான சம்பவம் சென்னை கடற்கரை ஒன்றில்தான் நடந்ததாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்திருக்கலாம் என்கின்றனர் மலையாள ஊடகங்கள்.அதனை யாரோ ஒருவர் தொலைவிலிருந்து வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்.இந்த செயலுக்காக சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
பாபநாசம் படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப்பிடம் சில காலம் உதவி இயக்குநராக இருந்தால் பிரணவ்மோகன்லால். அதன் பிறகு ஜித்து ஜோசப்பின் இயக்கத்திலேயே ‘ஆதி’ என்ற திரைப்படம் மூலமாக 2017 ஆம் ஆண்டு அறிமுகமானார். முன்னதாக தனது தந்தை மோகன்லாலுடன் குழந்தையில் சில படங்களில் நடித்துள்ளார். ’அப்பு’ என்ற படத்திற்காக சில குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில விருதை பெற்றுள்ளார். பாடல்கள் பாடுவது, பாட்டு எழுதுவது என இசை நாட்டமும் பிரணவ்மோகன்லாலுக்கு அதிகமாம். தனது அறிமுக படமான ஆதியில் ‘ ஜிப்ஸ் உமன்’ என்ற பாட்டை ஆங்கிலத்தில் எழுதி பாடியுள்ளார் பிரணவ் மோகன்லால்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)