மேலும் அறிய

இந்த உலகமே தப்புன்னு சொல்லுச்சு.. அம்மா கூட நின்னாங்க - தேசிய விருது நாயகி லக்‌ஷ்மி நெகிழ்ச்சி!

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகையாக தேசிய விருதுக்கு தேர்வான லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குநராக திரையுலக பயணத்தை தொடங்கிய வசந்த் கேளடி கண்மணி, ஆசை, அப்பு, ரிதம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்தை இயக்கியிருந்தார். எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஜெயமோகன், ஆதவன் ஆகியோரின் சிறுகதைகளை வசந்த் படமாக மாற்றியுள்ளார்.

படத்தில் மொத்தம் மூன்று கதைகள் இருக்கின்றன. இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த ஆந்தாலஜி சமீபத்தில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு தங்களது ஆதரவை கொடுத்தனர். மேலும், பெண்களை மையப்படுத்தி படம் எடுத்திருக்கும் வசந்த தனது காட்சியமைப்பிலும், கதை சொல்லல் விதத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் எனவும் பாராட்டினர்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் மத்திய அரசால் 68 வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் என சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், சிறந்த தமிழ் படம் - இயக்குனர் வசந்த், சிறந்த துணை நடிகை - லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகிய பிரிவுகளில் அறிவிக்கப்பட்டது. 

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகையாக தேசிய விருதுக்கு தேர்வான லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இது எனக்கு மிகப் பெரிய தருணம். ஒரு 'கனவு நனவாகும்' உணர்வு எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் கொள்ள நேற்று முழுவதும் எனக்கு தேவைப்பட்டது. நான் மிகவும் எதிர்பார்த்த கனவு. இதை அனுபவிப்பதில் என் இதயம் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நிறைந்திருக்கிறது. என்னை வாழ்த்திய உங்கள் ஒவ்வொருவருக்கும் கோடான கோடி நன்றிகள்

மற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

என் மீது நம்பிக்கை வைத்த வசந்த் சாருக்கு ஸ்பெஷல் நன்றி. இந்த வெற்றி உங்களுக்கு தனிப்பட்டதாக இருந்தால், இதற்கு நீங்கள் ஏதாவது ஒரு வகையில் பங்களித்துள்ளீர்கள் என்பதையும், எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அம்மா, இது உங்களுக்கானது. பத்து வருடங்களுக்கு முன்பு, நான் என் வாழ்க்கையில் மிக மோசமான தவறு செய்கிறேன் என்று உலகம் முழுவதும் சொன்னது. நீங்கள் என்னை மட்டும் நம்பி என்னை இருக்க அனுமதித்தீர்கள். நான் மகிழ்ச்சி அடைகிறேன், இன்றைக்கு நீங்கள்தான் அதற்கு காரணம் அவர்களிடம் 'நான் சொன்னேன்!” என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeralஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
Embed widget