மேலும் அறிய

இந்த உலகமே தப்புன்னு சொல்லுச்சு.. அம்மா கூட நின்னாங்க - தேசிய விருது நாயகி லக்‌ஷ்மி நெகிழ்ச்சி!

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகையாக தேசிய விருதுக்கு தேர்வான லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குநராக திரையுலக பயணத்தை தொடங்கிய வசந்த் கேளடி கண்மணி, ஆசை, அப்பு, ரிதம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்தை இயக்கியிருந்தார். எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஜெயமோகன், ஆதவன் ஆகியோரின் சிறுகதைகளை வசந்த் படமாக மாற்றியுள்ளார்.

படத்தில் மொத்தம் மூன்று கதைகள் இருக்கின்றன. இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த ஆந்தாலஜி சமீபத்தில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு தங்களது ஆதரவை கொடுத்தனர். மேலும், பெண்களை மையப்படுத்தி படம் எடுத்திருக்கும் வசந்த தனது காட்சியமைப்பிலும், கதை சொல்லல் விதத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் எனவும் பாராட்டினர்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் மத்திய அரசால் 68 வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் என சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், சிறந்த தமிழ் படம் - இயக்குனர் வசந்த், சிறந்த துணை நடிகை - லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகிய பிரிவுகளில் அறிவிக்கப்பட்டது. 

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகையாக தேசிய விருதுக்கு தேர்வான லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இது எனக்கு மிகப் பெரிய தருணம். ஒரு 'கனவு நனவாகும்' உணர்வு எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் கொள்ள நேற்று முழுவதும் எனக்கு தேவைப்பட்டது. நான் மிகவும் எதிர்பார்த்த கனவு. இதை அனுபவிப்பதில் என் இதயம் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நிறைந்திருக்கிறது. என்னை வாழ்த்திய உங்கள் ஒவ்வொருவருக்கும் கோடான கோடி நன்றிகள்

மற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

என் மீது நம்பிக்கை வைத்த வசந்த் சாருக்கு ஸ்பெஷல் நன்றி. இந்த வெற்றி உங்களுக்கு தனிப்பட்டதாக இருந்தால், இதற்கு நீங்கள் ஏதாவது ஒரு வகையில் பங்களித்துள்ளீர்கள் என்பதையும், எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அம்மா, இது உங்களுக்கானது. பத்து வருடங்களுக்கு முன்பு, நான் என் வாழ்க்கையில் மிக மோசமான தவறு செய்கிறேன் என்று உலகம் முழுவதும் சொன்னது. நீங்கள் என்னை மட்டும் நம்பி என்னை இருக்க அனுமதித்தீர்கள். நான் மகிழ்ச்சி அடைகிறேன், இன்றைக்கு நீங்கள்தான் அதற்கு காரணம் அவர்களிடம் 'நான் சொன்னேன்!” என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மணிப்பூரில் அதிர்ச்சி: சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை
மணிப்பூரில் அதிர்ச்சி: சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை
UP Jai Shri Ram: தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு பாஸ் மார்க் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
UP Jai Shri Ram: தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு பாஸ் மார்க் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
Breaking News LIVE: மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Breaking News LIVE: மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
DC Vs MI, IPL 2024: உள்ளூர் மைதானத்தில் பழிவாங்குமா டெல்லி? மும்பை உடன் இன்று மோதல்
DC Vs MI, IPL 2024: உள்ளூர் மைதானத்தில் பழிவாங்குமா டெல்லி? மும்பை உடன் இன்று மோதல்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rahul gandhi Chombu campaign  : சொம்பை தூக்கிய ராகுல்! ஆத்திரத்தில் பாஜக! கர்நாடக காங்கிரஸ் பரபரAyyakannu pressmeet : ”1000 பேரு ரெடி! மோடிக்கு செக்” அய்யாக்கண்ணு அதிரடிDMK Councillor arrest :  பெண் VAO-ஐ தாக்கிய திமுக கவுன்சிலர் கைது! நடந்தது என்ன?DK Shivakumar daughter : ”அரசியலுக்கு வர்றேனா? காங்கிரஸ் பத்தி தெரியாது” D.K.சிவக்குமார் மகள் தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மணிப்பூரில் அதிர்ச்சி: சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை
மணிப்பூரில் அதிர்ச்சி: சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை
UP Jai Shri Ram: தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு பாஸ் மார்க் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
UP Jai Shri Ram: தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு பாஸ் மார்க் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
Breaking News LIVE: மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Breaking News LIVE: மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
DC Vs MI, IPL 2024: உள்ளூர் மைதானத்தில் பழிவாங்குமா டெல்லி? மும்பை உடன் இன்று மோதல்
DC Vs MI, IPL 2024: உள்ளூர் மைதானத்தில் பழிவாங்குமா டெல்லி? மும்பை உடன் இன்று மோதல்
Lok Sabha Polls Phase 2: முடிந்தது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, 88 தொகுதிகள் - 61% - மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்
Lok Sabha Polls Phase 2: முடிந்தது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, 88 தொகுதிகள் - 61% - மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்
Black Man Dies: அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஜார்ஜ் பிளாய்ட்-  கருப்பின நபரின் கழுத்தின் மீது காலை வைத்த போலீசார், கைதி பலி
Black Man Dies: அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஜார்ஜ் பிளாய்ட்- கருப்பின நபரின் கழுத்தின் மீது காலை வைத்த போலீசார், கைதி பலி
Today Rasipalan: கன்னிக்கு திறமை; துலாம்-க்கு நன்மை- உங்கள் ராசிக்கான இன்றைய  பலன்கள்!
Today Rasipalan: கன்னிக்கு திறமை; துலாம்-க்கு நன்மை- உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
KKR vs PBKS Match Highlights: பேர்ஸ்டோவ் சதம்; 262 ரன்கள் இலக்கை எட்டி KKR-ஐ 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப்
KKR vs PBKS Match Highlights: பேர்ஸ்டோவ் சதம்; 262 ரன்கள் இலக்கை எட்டி KKR-ஐ 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப்
Embed widget