மேலும் அறிய

’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

’வடை சுடுவது என்று முடிவாகிவிட்ட பிறகு அது மெது வடையாக இருந்தால் என்ன ? பருப்பு வடையாக இருந்தால் என்ன ? என்ற கேள்வியும் எழாமல் இல்லை’

‘பெண்களை யாரும் சாதாரணமாக நினைக்காதீர்கள்’  என்பதையும் ’மக்களை நீங்கள் நேசித்தால் அவர்கள் உங்களை நேசிப்பார்கள்’ என்பதையும் சொல்லும் படம்தான் ‘தலைவி’’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

சட்டப்பேரவையில் கீழே தள்ளப்பட்டு, சேலை பிடித்து இழுக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் ஜெயலலிதா, இனி முதலமைச்சராகத்தான் சட்டப்பேரவைக்குள் வருவேன் என சூளுரைக்கும் காட்சியில் தொடங்கி, அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கட்சியினர் ’குனிந்து கும்பிடுபோடும்’ காட்சியில் முடிகிறது படம்.’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

ஜெயலலிதாவாக – கங்கனா ரணாவத், எம்.ஜி.ஆராக – அரவிந்த்சாமியும், - ஆர்.எம்.வீரப்பனாக – சமுத்திரக்கனியும், கருணாநிதியாக – நாசரும், சசிகலாவாக – பூர்ணாவும், ஜெயலலிதா உதவியாளராக தம்பி ராமய்யாவும் நடித்திருக்கிறார்கள்.’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

இந்த திரைப்படத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆரை காட்டிலும் ஆர்.எம்.வீரப்பனாக நடிக்கும் சமுத்திரக்கனி பாத்திரம்தான் கவனிக்க வைக்கிறது. எம்.ஜி.ஆருடன் எந்த நடிகையும் நெருங்கி பழகிவிடக்கூடாது என்பதில் தொடக்கத்தில் இருந்தே கவனமாக இருக்கும் ஆர்.எம்.வீரப்பன், முதலில் எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகத் தொடங்கும் ரெஜினாவை படத்தை விட்டே விரட்டுகிறார். அதன்பின்னர், ஜெயலலிதாவான கங்கனா ரனாவத்தும், எம்.ஜி.ஆரான அரவிந்த்சாமியும் திரைப்பட காட்சிகளை தாண்டி நெருங்கத் தொடங்கும்போது ஆர்.எம்.வீரப்பனால் அதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

எம்.ஜி.ஆரையும் – ஜெயலலிதாவையும் பிரிக்க தன் முகபாவனைகளாலேயே திட்டம் தீட்டுகிறார் ஆர்.எம்.வீரப்பன். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரை சந்திக்க செல்லும் ஆர்.எம்.வீரப்பனை, சந்திக்கவிடாமல் தடுக்கும் ஜெயலலிதா, பல மணிநேரம் அவரையும் எம்.ஜி.ஆரை காண வந்தவர்களையும் காக்க வைக்கிறார். பின்னர் அறையில் இருந்து வெளியில் வரும் ஜெயலலிதாவிடம் இவ்வளவு நேரம் என்ன செய்தீர்கள் என்று கேட்டதற்கு ‘மெதுவடை’ என சொல்லி நக்கல் செய்து,  ’மெதுவடை எப்படி செய்றது அப்டின்னு பேசிக்கிட்டு இருந்தோம்’ என கவுன்ட்டர் கொடுப்பார்.’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

அதன்பிறகு இந்த ’மெதுவடை’ ஆர்.எம்.வீரப்பனை தூங்கவிடாது. ‘திருப்பிக் கொடுக்கனும் சிவாஜி’ என்று ஒரு பருப்பு வடையாவது ஜெயலலிதாவிற்கு திரும்ப கொடுத்துவிடவேண்டும் என தீவிரமாக இயங்கத் துவங்குவார் ஆர்.எம்.வீரப்பனான சமுத்திரகனி. அடுத்த நாள் ஷூட்டிங்கு வரும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை பார்க்க அவரது அறைக்கு செல்ல முற்படுவார்.’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

இப்போது சமுத்திரக்கனியான ஆர்.எம்.வீரப்பன், ஒரு முக்கியமான விஷயம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லி ஜெயலலிதாவை வெளியே காக்க வைத்துவிடுவார். சிறிது நேரம் கழித்து வெளியே வரும் ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவிடம்  செக்கை கொடுத்து ’நேற்றோடு உன்னுடைய ரோல் முடிந்துவிட்டது, படத்தில் உன்னை கொன்றுவிட்டேன், இனி தமிழ் படங்களில் நீ நடிக்கவே முடியாது. வேண்டுமென்றால் தெலுங்கு, கன்னடம் படங்களில் போய் வாய்ப்புத் தேடு’ இல்லையெனில், ’வீட்ல மெது வட சுட்டு சாப்டு’ என சொல்லி அதே மெது வடையை திருப்பிக் கொடுப்பார். நேற்று தான் கொடுத்த மெது வடையையே தனக்கு இப்போது வீரப்பன் திருப்பி கொடுத்ததை ஜெயலலிதாவால் தாங்கிக்கொள்ள முடியாது. வடை சுட்டு ஒரு நாள் ஆகியிருக்கும் என்பதால் அந்த வாடை ஜெயலலிதாவான கங்கனாரனாவத்தை போட்டு வாட்டும்.

’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

இதனை எம்.ஜி.ஆரிடம் முறையிட்டுவிட்டு எதுவும் நடக்காததால் அப்செட்டான ஜெயலலிதா வீட்டிற்கு சென்று, சிவாஜிகணேசனை பற்றி புகழ்ந்து ஒரு பிரஸ் மீட் கொடுப்பார். அதன்பிறகு சிவாஜியோடு நடிக்கும் வாய்ப்பு வரத் தொடங்கும், எம்.ஜி.ஆர் வேறு நாயகிகளுடன் நடிக்கும் படத்திற்கு பெரிய ஆதரவு இருக்காது.’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

இதனால், ஜெயலலிதா வீடு தேடி வரும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை மீண்டும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிக்க சம்மதிக்க வைப்பார். இதில் மகிழ்ச்சியடையும் ஜெயலலிதா மீண்டும் தன்னுடைய ‘மெது வடை’  ரெசிபியை கையிலெடுப்பார்.’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

இந்த முறை வெறும் வார்த்தையால் ‘மெது வடை’ என சொல்லாமல், ஒரு பார்சலில் ஆர்.எம்.வீரப்பனான சமுத்திரகனி இல்லத்திற்கே ‘மெது வடையை’ அனுப்பிவைப்பார். அந்த பார்சலை பிரித்து ‘மெதுவடையை’ எடுத்துப் பார்க்கும் ஆர்.எம்.வீரப்பனுக்கு முகத்தில் ஈ ஆடாது.  கையில் வைத்து அப்படியே அந்த மெதுவடையை பார்த்துக்கொண்டிருக்கும் அவர், ஒரு கட்டத்தில் ’லபக்’ கென்று அதை சாப்பிட்டு தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொள்வார் என்றே படம் பார்க்கும் ரசிகர்கள் நினைக்கும்போது, அந்த மெது வடையை சாப்பிடாமல் வெகுநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பார்.’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

ஏனென்றால், ஜெயலலிதா அனுப்பிய அந்த மெதுவடை பார்ப்பதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் உடனே  சாப்பிடவேண்டும் என்பதுபோல இருக்காது. எண்ணெய் குடித்து, காய்ந்துபோய், ஒரு ஷேப்பே இல்லாமல் இருக்கும். உண்மையில் அது மெதுவடை தானா என்றே ஆர்.எம்.வீரப்பனுக்கு சந்தேகம் வந்திருக்கும். அதனால்தான் அந்த வடையை சாப்பிடவும் முடியாமல், தூக்கி வீசவும் முடியாமல் கையில் வைத்து அதனை ஆராய்ந்திருப்பார்.’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

இப்படி இந்த தலைவி படத்தில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீரப்பன், கருணாநிதி உள்ளிட்டோருக்கு நிகராக ஒரு சாதாரண ‘மெது வடைக்கும்’ இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் ஏன் இயக்குநர் மெது வடையை தேர்வு செய்தார் என்றும், பருப்பு வடை என்ன பாவம் செய்தது எனவும் பருப்பு வடை பிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.’தலைவி படத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மெது வடை அனுப்பிய ஜெயலலிதா’ பருப்பு வடை அனுப்பாதது ஏன் என கேள்வி..!

தலைவி பார்ட் 2 எடுத்தால், அதில் பருப்பு வடை சுடுவது குறித்துதான் சீன் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.  இயக்குநர் ஏ.எல்.விஜய் பருப்பு வடை பிரியர்களின் கோரிக்கயை நிச்சயம் பார்ட் 2-வில் பரிசீலிப்பார் என நம்புவோம்..!

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
Embed widget