மேலும் அறிய

Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

பெரும்பாலான நாயகர்கள் இந்து பெயர்கள் கொண்ட கதாபாத்திரத்திலேயே தங்களது படத்தில் நடிக்க விரும்பும் நிலையில், சிம்பு இசுலாமியராக மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

மாநாடு திரைப்படம் பல தடைகளையும் கடந்து திரையரங்குகளில் வெளியாகி பெருத்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் Time Loop கான்செப்ட் பற்றியும், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பு குறித்தும் ரசிகர்கள் சிலாகித்து பேசிவருகின்றனர். ஆனால், வழக்கமாக பலரும் திரைகளில் பேச மறுக்கும் விஷயத்தையும் பேசியிருக்கிறது மாநாடு.Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

படத்தின் தொடக்கத்தில் இருந்தே இசுலாமியர்கள் எதிர்கொள்ளும் வலிகளை வார்த்தைகளாக, வசனங்களாக வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. படத்தில் அப்துல் காலிக் என்ற இசுலாமியராக நடித்திருப்பார் சிம்பு. பெரும்பாலான நாயகர்கள் இந்து பெயர்கள் கொண்ட கதாபாத்திரத்திலேயே தங்களது படத்தில் நடிக்க விரும்பும் நிலையில், சிம்பு இசுலாமியராக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

விமானத்தில், நாயகியான கல்யாணி பிரியதர்ஷன் தன்னை சிம்புவிடம் சீதாலட்சுமி என்று தன்னுடைய பெயரை சொல்லி அறிமுகப்படுத்தும்போது, உங்கள் பெயர் என்ன என்று கேட்பார். அதற்கு சிம்பு, ‘காலிக், அப்துல் காலிக்’ என்று சொல்வார். சீதாலட்சுமியான கல்யாணி பிரியதர்ஷன், நீங்க முஸ்லீமா என சிம்புவிடம் கேட்பார். அதற்கு சிம்பு,  ஆமா, முஸ்லீம்ன்னா என்கிட்ட பேசியிருக்க மாட்டீங்கல ? என கேட்பார்.  Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

அப்போது சீதாலட்சுமி, ’அப்டியில்ல. என்னோட பிரண்ட்ஸ் நிறைய பேர் முஸ்லீம்தான்’  ரம்ஜான் அன்னிக்கு எங்க வீட்டுக்கு பக்கெட் பக்கெட்டா பிரியாணி அனுப்புவாங்க தெரியுமா ? என சிம்புவை பார்த்து சொல்வார், அதற்கு பதில் சொல்லும் அப்துல் காலிக்கான சிம்புவோ, ‘பிரியாணி அப்டின்னா மட்டும்தானே எங்க ஞாபகம் எல்லாம் உங்களுக்கு வரும்’ என சீதாலட்சுமியை பார்த்து கேட்பார்.

இது வெறும் படத்தின் வசனமோ, சாதாரணமாக கடந்துபோய்விடக்கூடிய கேள்வியோ அல்ல. இந்தியாவில் இருக்கும் மாற்று சமூகத்தினர் ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியிடம் தாங்களே கேட்டு, தெளிவு பெற வேண்டிய கேள்வி. இசுலாமியர்கள் என்றால் அவர்கள் வன்முறையாளர்கள், தீவிரவாதிகளாகதான் இருப்பார்கள் என்ற சித்தரிப்புகளை இன்றும் நம்பும் பலரது நெஞ்சங்களை நோக்கி  இயக்குநரால் எழுப்பப்பட்ட கேள்வி கணை இது.Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

முதல்வரை கொல்ல, கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஒரு இசுலாமியரின் மகனான ரஃபீக்கை தேர்வு செய்யும் போலீசார், பின்னர், அவருக்கு மாற்றாக அப்துல் காலிக் என்ற இசுலாமியரான சிம்புவை மிரட்டி, முதல்வரை கொல்ல சொல்கின்றனர். கொலை, வன்முறை, தீவிரவாதம் என்றால் அதை செய்தது இசுலாமியர்களாகதான் இருப்பார்கள் என்ற பொதுப்புத்தியில் புரையோடிப்போன புரட்டுகளை அப்பட்டமாக சுட்டிக் காட்டுகிறது இந்த காட்சிகள்.Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

‘இன்னும் எத்தன நாளைக்குதான் ஒரு சமூகத்தையே தீவிரவாதிகள் அப்டின்னு முத்திரை குத்துவீங்க’ என சிம்பு காவல் துறை அதிகாரியான எஸ்.ஜே. சூர்யாவிடம் பேசும் வசனங்கள், வெறும் வசனங்கள் அல்ல, அது இந்த நாட்டில், இன்னும் இசுலாமியர்கள் எதிர்கொண்டு வரும் வலிகள்.Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

மாநாடு’ என்ற பரபரப்பான ஒரு படத்தில் எந்த சர்சைகளும் எழுந்துவிடாதபடி, மிக கவனமாக இசுலாமியர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்களை, கஷ்டங்களை, வலிகளை திரைமொழி வாயிலாக ரசிகர்களுக்கு கடத்தியிருக்கும் வெங்கட் பிரபு, இயக்குநர் என்ற அடையாளத்தை கடந்து, சமூக பொறுப்புணர்வு கொண்ட மனிதராக மிளிர்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget