மேலும் அறிய

Jai Next Movie | விட்ட கேப்ப புடிக்கணும்.. சைக்கோ வில்லனாக ஜெய்... பரபரப்பாக தொடங்கவுள்ள பட்டாம்பூச்சி..!

பட்டாம் பூச்சி படத்தில் சைக்கோ வில்லனாக நடிக்க ஜெய் மிகவும் சிரமப்பட்டதாக அந்தப் படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். 

பட்டாம் பூச்சி படத்தில் சைக்கோ வில்லனாக நடிக்க ஜெய் மிகவும் சிரமப்பட்டதாக அந்தப் படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். 

பட்டாம் பூச்சி படத்தில் நடிகர் ஜெய் முதன் முறையாக வில்லனாக நடித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்திற்கு அந்தப்படத்தின் இயக்குநர் பத்ரி அளித்துள்ள பேட்டியில், “ இந்தப்படத்தில் சுந்தர் சி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெய் மனநலம் பாதிக்கப்பட்ட வில்லனாக நடித்துள்ளார். 


Jai Next Movie |  விட்ட கேப்ப புடிக்கணும்.. சைக்கோ வில்லனாக ஜெய்...  பரபரப்பாக தொடங்கவுள்ள பட்டாம்பூச்சி..!

படம் 80 களில் நடக்கிறது. இந்த விஷயம் சுவாரஸ்சியம் மிகுந்ததாக இருக்கும். சுந்தர் சியின் உயரமும், உடற்கட்டும்தான் அவரை இந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க என்னைத் தூண்டியது. படம் 80 களில் நடக்கிறது, அப்போது தற்போது உள்ளது போல டெக்னாலாஜி வசதிகளெல்லாம் கிடையாது. ஆதலால் அந்த போலீஸ் கதாபாத்திரம் தனது புத்திசாலித்தனத்தைக் கொண்டு அந்த வழக்கை அணுக வேண்டும். அதை சிறப்பாக செய்திருக்கிறார் சுந்தர் சி. 

எனக்கு கில்லர் முகஜாடை இல்லாத ஒருவர் தேவைப்பட்டார். ஜெய்யை அணுகினோம்.வில்லன் கதாபாத்திரத்தில்  நடிக்க முதலில் ஜெய் தயங்கினார். பிறகு சுந்தர் சி மேல் மரியாதை காரணமாக கதையைக் கேட்டார். கதையை கேட்டு முடித்த உடன் படத்தில் நடிப்பதாக ஒத்துக்கொண்டார். 


Jai Next Movie |  விட்ட கேப்ப புடிக்கணும்.. சைக்கோ வில்லனாக ஜெய்...  பரபரப்பாக தொடங்கவுள்ள பட்டாம்பூச்சி..!

படப்பிடிப்பின் போது ஜெய் ஒரு விஷயத்தை பகிர்ந்தார். சுப்ரமணியபுரம்  ‘கண்கள் இரண்டால்’ பாடல் படப்பிடிப்பின் போது தொடர்ந்து தலையை அசைத்துக்கொண்டே இருந்ததால், தனக்கு கடுமையான கழுத்து வலி ஏற்பட்டதாக கூறினார். அது வெறும் 4, 5 நாட்கள் நடந்த படப்பிடிப்புதான். ஆனால் இந்தப்படத்தில் ஜெய் கதாபாத்திரம் தொடர்ந்து தலையையும் உடலையும் அசைத்துக் கொண்டே இருப்பது போன்று காட்சிகள் உள்ளது. அப்படியென்றால் ஜெய் எவ்வளவு வலியை கடந்து வருவார் என்று கற்பனை செய்து பாருங்கள். 60 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்” என்று பேசியுள்ளார். இந்தப் படத்தில் பிரேம் கலை இயக்குநராகவும், கிச்சா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். 

முன்னதாக பகவதி படம் மூலமாக திரையுலத்திற்கு அறிமுகமான நடிகர் ஜெய் பின்னர் வெங்கர் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து இவர் நடித்த சுப்ரமணிய புரம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஜெய் கலகலப்பு 2 படம் மூலமாக இயக்குநர் சுந்தர் சி உடன் இணைந்தார். இந்த நிலையில்தான் இயக்குநர் பத்ரி இயக்கும் சுந்தர் சியும் ஜெய்யும் இணைந்துள்ளனர். சுந்தர் சி முன்னதாக இயக்குநர் பத்ரி இயக்கிய நாங்க ரொம்ப பிஸி படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படம் கன்னட படமான மாயா பஜார் படத்தின் ரீமேக் ஆகும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Udhayanidhi Stalin Angry | பதவி கேட்ட நிர்வாகிகள்.. டோஸ் விட்ட உதயநிதி! பரபரக்கும் அன்பகம்!Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
மாஸ்டர் பிளான்! படத்துல மட்டும் இல்ல, நிஜத்திலும் களத்தில் இறங்கும் விஜய்..!
மாஸ்டர் பிளான்! படத்துல மட்டும் இல்ல, நிஜத்திலும் களத்தில் இறங்கும் விஜய்..!
Crime: தென்காசி அருகே மதுவால் வந்த பிரச்னை; கொலையில் முடிந்த கொடுமை
தென்காசி அருகே மதுவால் வந்த பிரச்னை; கொலையில் முடிந்த கொடுமை
ரைசியின் மறைவை தொடர்ந்து ஈரானின் இடைக்கால அதிபராகும் முஹம்மது முக்பர்.. யார் இவர்? 
ரைசியின் மறைவை தொடர்ந்து ஈரானின் இடைக்கால அதிபராகும் முஹம்மது முக்பர்.. யார் இவர்? 
சென்னை அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த  2 ரயில்கள்..!  அதிர்ச்சியில் அலறிய பயணிகள்..!
சென்னை அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரயில்கள்..! அதிர்ச்சியில் அலறிய பயணிகள்..!
Embed widget