மேலும் அறிய

Vetrimaaran: என்னால் ஏத்துக்கவே முடியல.. வெற்றி துரைசாமியை நினைத்து கண்கலங்கிய வெற்றிமாறன்!

கடந்த 11 ஆண்டுகளாக நான் என்ன செய்தாலும் வெற்றியின் பங்களிப்பு எதோ ஒரு வகையில் இருக்கும். நான் வேண்டாம் என சொன்னாலும் மறுத்து என்னோட பங்களிப்பு வேண்டும் என சொல்வார்.

இயக்குநர் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் கண்கலங்கியபடி நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

சென்னையின் முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் ஒரே மகனான வெற்றி துரைசாமி இளம் தொழில் முனைவோராகவும், வனவிலங்கு புகைப்பட கலைஞராகவும் இருந்து வந்தார். அதேசமயம் சினிமா மீதும் ஆர்வம் கொண்ட வெற்றி துரைசாமி என்றாவது ஒருநாள் என்ற படத்தை இயக்கியிருந்தார். தனது 2வது படம் தொடர்பான பணிகளுக்காக இமாச்சலபிரதேசம் சென்றிருந்த அவர் கார் விபத்தில் உயிரிழந்தார். கிட்டதட்ட 8 நாட்களுக்குப் பின் சட்லஜ் நதியில் இருந்து அவரது உடல் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் கண்டெடுக்கப்பட்டது. 

வெற்றி துரைசாமி உடல் சென்னைக்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் இறுதிச்சடங்கு நடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே வெற்றி துரைசாமி மறைவையொட்டி அவருக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “வெற்றி துரைசாமி தன்னை சினிமா சம்பந்தப்பட்ட இடங்களில் எங்கு அறிமுகம் செய்தாலும் வெற்றிமாறனின் மாணவன் தான் என சொல்வார். என்கிட்ட தான் சினிமா கற்றுக்கொண்டேன் என சொல்லுவார். ஆனால் உண்மையில் நான் தான் ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொண்டேன். எங்கள் இருவருக்குமான பொதுவான விருப்பங்கள் நிறைய உள்ளது. அது எல்லாவற்றை பற்றியும் தேடல் இருக்கும் மனிதர் வெற்றி துரைசாமி. அவர் வன விலங்கு புகைப்படக்காரரா நிறைய விருதுகளை வாங்கியிருக்காரு. எனக்கு தனிப்பட்ட முறையில கடந்த 11 ஆண்டுகளாக நான் என்ன செய்தாலும் வெற்றியின் பங்களிப்பு எதோ ஒரு வகையில் இருக்கும். 

நான் வேண்டாம் என சொன்னாலும் மறுத்து என்னோட பங்களிப்பு வேண்டும் என சொல்வார். அதனுடைய உச்சமாக தான் ஐஐஎஃப்சி என்ற திரைப்பட கல்லூரிக்கு இடம் கொடுத்தார். இதனை சாதாரணமாக செய்ய யாருக்கும் மனசு இருக்காது. அவர் அப்படி முன்வரவில்லை என்றால் இது உருவாகியிருக்க இன்னும் எத்தனை காலம் ஆகியிருக்கும் என தெரியாது. வெற்றி துரைசாமி தன் தந்தையைப் போல எப்போதும் எல்லாருக்கும் உதவி செய்ய பழக்கம் இருப்பதால் இப்படி செய்ய வைத்திருக்கும். 

அவர் எப்போதும் சிரித்துக் கொண்டு, அனைவரிடத்திலும் அன்பு காட்டக்கூடிய மனிதர். வெற்றியின் மறைவு யாராலும் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பாக உள்ளது. ஆனால் காலம் அடிக்கடி இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் நிறுத்துகிறது. இந்த நேரத்தில் நாம் துணிச்சலாக எடுத்து வைக்கக்கூடிய நகர்வுகள் தான் நம்மை யாருன்னு டிசைன் பண்ணும் தருணமாக இருக்கும். வெற்றி துரைசாமி தன்னுடைய 2வது படத்துக்கு பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அவரின் நினைவாக ஐஐஎஃப்சி  சார்பாக முதல் திரைப்படம் எடுக்கக்கூடியவர்களுக்கு விருது வழங்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அவர் வனவிலங்கு புகைப்படக்காரர்களுக்கு விருது வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வாழ்க்கையில் நாம நிறைய பேரை சந்திக்கிறோம். கடந்து போறோம், இழக்கிறோம். ஒரு சிலரின் மறைவு தான் நம்மில் சிலவற்றை எடுத்துச் செல்கிறது. அப்படி ஒருவர் தான் வெற்றி துரைசாமி” என கண்கலங்கிய படியே பேசினார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
Breaking News LIVE:  தூத்துக்குடி : 61 நாட்களுக்குப் பிறகு ஆர்வத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
தூத்துக்குடி : 61 நாட்களுக்குப் பிறகு ஆர்வத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
Breaking News LIVE:  தூத்துக்குடி : 61 நாட்களுக்குப் பிறகு ஆர்வத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
தூத்துக்குடி : 61 நாட்களுக்குப் பிறகு ஆர்வத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
Rajat Sharma : காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர் ரஜத் சர்மா வழக்கு - டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Rajat Sharma : காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர் ரஜத் சர்மா வழக்கு - டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?
EPFO Rules Changed: இனி பி.எஃப்., கணக்கில் கோவிட் 19 அட்வான்ஸ் பணம் வழங்கப்படாது - EPFO அறிவிப்பு
EPFO Rules Changed: இனி பி.எஃப்., கணக்கில் கோவிட் 19 அட்வான்ஸ் பணம் வழங்கப்படாது-EPFO அறிவிப்பு
மழைக்கால தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே? - திருமாவளவன்
மழைக்கால தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே? - திருமாவளவன்
Embed widget