மேலும் அறிய

Naatu Naatu Song: ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்.. இந்தியாவில் படமாக்கப்படவில்லை.. ஏன் தெரியுமா?

ஆஸ்கர் விருது வென்றுள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஏன் இந்தியாவில் படமாக்கப்படவில்லை என்பதை இயக்குநர் ராஜமௌலி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ஆஸ்கர் விருது வென்றுள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஏன் இந்தியாவில் படமாக்கப்படவில்லை என்பதை இயக்குநர் ராஜமௌலி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் ஆர்.ஆர்.ஆர்.படம் வெளியானது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்த நிலையில் கீரவாணி இசையமைத்திருந்தார். 

இதனிடையே அகாடமி அவார்ட்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 95வது நிகழ்வில் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் விருது வென்றுள்ளது. இதற்கான விருதை இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் பெற்றுக் கொண்டனர். 

இந்த பாட்டின் நடன அசைவுகள் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் ஆட்டம் போடவும் வைத்தது. முன்னதாக சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்ட சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடலுக்காக இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் கூட்டாக பெற்றுக்கொண்டனர். 

உக்ரைனில் படப்பிடிப்பு 

இதற்கிடையில் நாட்டு நாட்டு பாடல் உக்ரைனில் உள்ள அதிபர் மாளிகை முன்பு படமாக்கப்பட்டது. கடந்த ஒரு வருடமாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அதற்கு முன்பாகவே இந்த பாடலானது படமாக்கப்பட்டது. ஆனால் ஏன் இப்பாடல் இந்தியாவில் படமாக்கப்படவில்லை என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இதற்கு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ராஜமௌலி பதிலளித்துள்ளார். 

அதன்படி, “நாட்டு நாட்டு பாடலை முதலில் படமாக்க நினைத்தபோது, ​​லொகேஷன் பற்றி நிறைய யோசித்தோம். இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த விரும்பினோம். ஆனால் அப்போது மழைக்காலம் என்பதால் படப்பிடிப்பு தடைபடும் என்று நினைத்தோம். இதன்பின்னரே உக்ரைன் அதிபர் மாளிகை முன் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம்” என தெரிவித்தார். 

மேலும், ‘உக்ரைன் அதிபர் கட்டிடத்தின் வண்ணங்கள், எதிரே உள்ள காலி இடம் அந்த  பாடலுக்கு எல்லா வகையிலும் பொருத்தமாக இருந்தது. அங்கு படமாக அனுமதி கிடைக்குமா? என்ற சந்தேகம் எங்களுக்கும் இருந்தது. ஆனால், அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி திரைப்படப் பின்னணி கொண்டவர் என்பதால், அந்தப் பாடலைப் படமாக்க அவருக்கு அனுமதி கிடைத்தது’ என்று ராஜமௌலி அந்த பேட்டியில் கூறியுள்ளார். பாடல் முடிந்ததும் நாட்டு நாட்டு படப்பிடிப்பிற்கு இதுதான் சரியான இடம் என்று பலரும் பாராட்டினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
Virat Kohli: கோலியின் படை.. ரன் மெஷினை கவுரவப்படுத்த ரசிகர்கள் ப்ளான்! சின்னசாமியில் காத்திருக்கும் சம்பவம் என்ன?
Virat Kohli: கோலியின் படை.. ரன் மெஷினை கவுரவப்படுத்த ரசிகர்கள் ப்ளான்! சின்னசாமியில் காத்திருக்கும் சம்பவம் என்ன?
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
Embed widget