மேலும் அறிய

`நண்பர்கள் தான் உலகம்’.. `நடன மாஸ்டர் கிடையாது’ - விஜய் பற்றி மனம் திறந்த எஸ்.ஏ.சி - ஷோபா தம்பதி!

சில ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், தாய் ஷோபாவும் அவரைப் பற்றி அளித்த நேர்காணல் ஒன்றில் இருந்து சில உரையாடல்களை இங்கே அளிக்கிறோம்.. 

நடிகர் விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் தனிப்பட்ட ரீதியான பிரச்சினைகள், பிரிவு என ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், தாய் ஷோபாவும் அவரைப் பற்றி அளித்த நேர்காணல் ஒன்றில் இருந்து சில உரையாடல்களை இங்கே அளிக்கிறோம்.. 

விஜயின் நண்பர்களைப் பற்றி கேட்ட போது, எஸ்.ஏ.சந்திரசேகர், `வீட்டில் விஜய் தனது நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவரின் சிரிப்புச் சத்தம் மட்டும் கேட்கும்.. தன் நண்பர்களிடம் பேசும் போது, அவர்கள் சொல்லும் ஜோக்கை அவர் ரசித்துக் கொண்டிருப்பார். அவருக்கு உலகமே அவரது நண்பர்கள் தான். அவர்களோடு தனி உலகத்தில் இருப்பார். மற்றவர்களைப் போல, காலத்திற்கேற்ப நண்பர்களை மாற்றிக் கொள்ளும் பழக்கம் அவருக்குக் கிடையாது. கல்லூரிக் காலத்தில் அவருடன் நண்பர்களான அந்த 5 பேர் மட்டும் தான் இன்றுவரை அவருக்கு நெருக்கம்’ எனக் கூறியுள்ளார். 

`நண்பர்கள் தான் உலகம்’.. `நடன மாஸ்டர் கிடையாது’ - விஜய் பற்றி மனம் திறந்த எஸ்.ஏ.சி - ஷோபா தம்பதி!

விஜய் முதன்முதலாகத் திரைப்படத்தில் பாடியது குறித்து கேட்ட போது அவர், `விஜய் வீட்டில் `ஹம்’ செய்து கொண்டே, பாடிக் கொண்டே இருப்பார். அதனால் தேவா சாரிடம் விஜய் பாடுவதற்காக கேட்டேன். அப்போதெல்லாம் ட்ராக் பாடுவார்கள். அதை பாடகர் கேட்டுவிட்டு, பிறகு வந்து ரெக்கார்டிங்கில் வந்து பாடுவார். அதனால் நாங்களும் ட்ராக் பாடி, விஜயிடம் கொடுத்து விட்டோம். அப்போது விஜய் எங்களிடம் ஒரு கண்டிஷன் போட்டார். `அப்பா, நான் போய் பாடிவிட்டு வருகிறேன். நீங்கள் யாரும் வரக்கூடாது’ என்பது அந்த கண்டிஷன். போன அரை மணி நேரத்தில், மீண்டும் வீடு திரும்பினார். `என்னாச்சுபா?’ என்று கேட்டேன்.. `பாடிட்டேன் பா!’ என்றார். பிறகு தேவா சாரிடம் சென்றேன்.. `நல்லா பாடிருக்காரு சார்!’ என்றார்’ எனத் தெரிவித்துள்ளார்.  

தன் மகனோடு பாடல் பாடியது குறித்து, விஜயின் தாய் ஷோபாவிடன் கேட்ட போது அவர், ``தொட்ட பெட்டா ரோடு மேல’ பாடலை விஜய் முதலிலேயே பாடிவிட்டு வந்தார். என்னிடம், `அம்மா நான் பாடிட்டேன். அப்பா கூப்பிடுறாரு.. நீங்க போய் பாடுங்க’ என்றார். அந்தப் பாடலில் என்னை விட அவர் நல்லா பாடிருப்பார். விஜய் பாடுவதை எனது குருவே பெரிதும் விரும்பி பாராட்டுவார். `கில்லி’ படத்தில் காமெடியாக வரும் காட்சி ஒன்றில், `மருதமலை மாமணியே’ பாடலின் `அய்யா’ என்ற சொல்லைச் சரியான சுருதியில் விஜய் பாடியதாக எனது குரு என்னிடம் அடிக்கடி சொல்லிப் பாராட்டுவார்’ எனக் கூறியுள்ளார். 

`நண்பர்கள் தான் உலகம்’.. `நடன மாஸ்டர் கிடையாது’ - விஜய் பற்றி மனம் திறந்த எஸ்.ஏ.சி - ஷோபா தம்பதி!

தொடர்ந்து விஜயின் நடனம் குறித்து பேசிய அவரது பெற்றோர், `நடனத்தைத் தனியாக வகுப்பு சென்று கற்றுக் கொள்ளவில்லை. இசை ஞானம் உள்ளவர்களுக்கு ராகம் பற்றிய புரிதல் இருக்கும். அதனால் எளிதாக ஆட முடியும். அவருக்குத் தனியாக இருக்கும் அறையில், ஒரு தொலைக்காட்சியில் பாடல்களைப் பார்த்து தனியாக ஆடிக் கொண்டிருப்பார் விஜய். சிறுவயதில் இருந்தே அவருக்கு இந்தப் பழக்கம் இருந்தது. அந்த அறைக்குள் தனியாக நடனம் ஆடுவார். ஆனால் மற்றவர்களுக்கு முன்பு ஆடுவதை விரும்ப மாட்டார்’ எனக் கூறியுள்ளனர். 

மேலும், `பலரும் விஜயின் நடன மாஸ்டர் யார் என்று கேட்டிருக்கிறார்கள்.. ஆனால் அப்படி அவருக்கு நடன மாஸ்டர் என்று யாரும் இல்லை. அவருக்கு அனைத்தையும் உற்று கவனிக்கும் திறமை உண்டு. ஒருவரைப் பார்த்து அப்படியே செய்யும் திறமை இருப்பதால், அவரால் நன்கு நடனம் ஆட முடிகிறது’ என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தயாரிப்பாளர் இல்லாமல் அஜித் குமார்...ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சகோதரர் அனில் குமார் !
தயாரிப்பாளர் இல்லாமல் அஜித் குமார்...ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சகோதரர் அனில் குமார் !
சினிமா நிகழ்ச்சிகளில் எங்களை ஆபாசமாக படம்பிடிக்கிறார்கள்..காந்தாரா பட நடிகை குற்றசாட்டு
சினிமா நிகழ்ச்சிகளில் எங்களை ஆபாசமாக படம்பிடிக்கிறார்கள்..காந்தாரா பட நடிகை குற்றசாட்டு
நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு
நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Embed widget