மேலும் அறிய

Cheran Father Passes Away: தவமாய் தவமிருந்த நிஜம்.. இயக்குநர் சேரனின் அப்பா பாண்டியன் மறைந்தார்..

Director Cheran Father: சேரனின் தந்தை பாண்டியன் சினிமா ஆப்பரேட்டராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான சேரனின் (Director Cheran) தந்தை எஸ். பாண்டியன் இன்று (நவ.16) காலமானார். அவருக்கு வயது 84.

சேரனின் தந்தை

தான் இயக்கிய படங்களுக்காக மூன்று தேசிய விருதுகள் வென்றும், பல வெற்றிப் படங்களைக் கொடுத்தும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் இயக்குநர் சேரன். இவரது தந்தை எஸ்.பாண்டியன் இன்று காலை 6.30 மணியளவில் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள அவரது சொந்த ஊரான பழையூர்பட்டியில் உயிரிழந்தார்.

சேரனின் தந்தை எஸ். பாண்டியன் சினிமா ஆப்பரேட்டராக பணிபுரிந்தவர். கடந்த சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 


Cheran Father Passes Away: தவமாய் தவமிருந்த நிஜம்.. இயக்குநர் சேரனின் அப்பா பாண்டியன் மறைந்தார்..

பாண்டியனின் இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் பழையூர்பட்டியில் உள்ள அவர்களது வீட்டில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேரன் குடும்பத்தினருக்கு பல்வேறு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

சேரனின் திரைப்பயணம்

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பட்டறையில் தொடங்கி, 1997ஆம் ஆண்டு ‘பாரதி கண்ணம்மா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் கால் பதித்த சேரன், பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு என தன் அடுத்தடுத்த படங்களின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து கோலிவுட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

தான் இயக்கிய வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளை வென்றுள்ளார் சேரன். மேலும் தமிழ்நாடு மாநில அரசின் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள சேரன், ஒரு நடிகராகவும் உருவெடுத்து தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தார். 

இறுதியாக 2019ஆம் ஆண்டு திருமணம் எனும் படத்தை இயக்கியிருந்த சேரன், இந்த ஆண்டு வெளியான தமிழ் குடிமகன் படத்தில் நடித்திருந்தார்.

தன் தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு சமர்ப்பிக்கும் வகையில், குழந்தைகளுக்காக அயராது பாடுபடும் தந்தைகளின் வலியைக் கடத்தும் வகையில் சேரன் 2005ஆம் ஆண்டு இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படம் இன்றும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget