மேலும் அறிய

Saranya Ponvannan: கொலை மிரட்டல் வழக்கில் சரண்யா பொன்வண்ணன் மீது போலீசில் புகார்.. நடந்தது என்ன?

Case on Saranya Ponvannan : நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஸ்ரீதேவி என்ற பெண் வசித்து வருகிறார்.

Case On Saranya Ponvannan : பக்கத்து வீட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் சரண்யா பொன்வண்ணன். அம்மா என்றால் இவரைப் போல இருக்க வேண்டும் என சொல்லும் அளவுக்கு சினிமாவில் வலம் வரும் இவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது, நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஸ்ரீதேவி என்ற பெண் வசித்து வருகிறார்.

இவரது வீட்டு கேட் சுமார் 20 அடி நீளம் உள்ளது. இதனிடையே நேற்று மாலை தனது வீட்டில் கேட்டை ஸ்ரீதேவி திறந்துள்ளார். அப்போது அது சரண்யா பொன்வண்ணனின் கார் அவரது வீட்டு வாசலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. ஸ்ரீதேவி வீட்டு கேட்டானது அவரது காரை உரசுவது போல சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சரண்யா பொன்வண்ணன் ஸ்ரீதேவி குடும்பத்தினரிடம் வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் சரண்யா குடும்பத்தினர் ஸ்ரீதேவி வீட்டுக்குள் புகுந்து மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சரண்யா பொன்வண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார். இதற்கு பதிலடியாக சரண்யா பொன்வண்ணன் குடும்பத்தினரும் புகாரளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி அளித்துள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் பார்க்கிங் என்ற படம் கார் பார்க்கிங் பிரச்சினையால் இரு குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட பிரச்சினை குறித்து பேசியது. அப்படி ஒரு சம்பவம் சரண்யா பொன்வண்ணனுக்கு நடந்துள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025):
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025): வருகிறாள் தனலட்சுமி! லாட்டரியில் இன்று யாருக்கு என்ன பரிசுகள்?
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
Embed widget